Skip to content Skip to sidebar Skip to footer

Blog Classic with sidebar

பூவிதழ் உமேஷ் கவிதைகள்
பெண் ஆணின் இதயத்தை வெல்லும் விதம் ஆணின் ஒரு கேள்விக்கு பெண்ணிடம் பல பதில்கள் உள்ளன கேட்பவர் யாரென்றறிந்த பிறகு அவள் பதிலை வெளிப்படுத்துகிறாள் அப்பெண் ஓர் ஆணின் இதயத்தை வெல்லும் விதம் அவனைக் காதலிப்பதாக நம்ப வைப்பதுதான் பிறகு ஆணின் உடலுக்கு ஒரு மலரின் இயல்பு வந்துவிடுகிறது அது மலரும் உலரும் உதிரும் அதற்குள் பெண் மிக நீளமான காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டிருப்பாள் அவனைக் காதலிக்கவும் அல்லது…
கீதாரியின் உப்புக்கண்டம் கவிதைகள்
1 ஆடுகள் வலசை போகையில் குட்டிகளை ஈன்றுவிட்டால் இடையனுக்குச் சுமை தெரியாது மாடுகள் காளைக் கன்றுகளை ஈன்றுவிட்டாலும் சுமையாகத் தெரியாது இதோ இந்தக் கராமறையாடு வலசை போகையில் ஈன்றது என்றும் இதோ இந்தக் கிளிக்கொம்பாடு அந்தி மறைகையில் ஈன்றுது என்றும்! இதோ இந்தக் காரிக்காளை ஒரு மதிய நேரத்தில் உச்சிவெயிலில் பிறந்ததென்றும் நினைவில் வைத்துக்கொள்வான் சுமை யெல்லாம் நீரின்றி வறண்டு கிடக்கும் இந்தக் குளத்திலும் வாடிக் கிடக்கும் அந்த நிலத்திலும் தான் 2 இடைச்சியே வா…! வந்த பாதையை நோக்கித் திரும்பப் போவோம். நாம் போக வேண்டிய பாதை இதுவல்ல. வழியில் எங்காவது ஆலமரமோ ஐயனாரோ இருந்தால் காட்டுப்பேச்சி சாட்சியாக மீண்டும் திருமணம் செய்து கொள்வோம் மை போலிருக்கும் கருவிளம் பூக்களை…
யவனிகா கவிதைகள்
சிள்வண்டுகள் இரவின் காலிக்கோப்பையை குளிர் நிரப்பும் நேரம் அனைத்தும் மிகத்தொலைவில் விலகி இருக்கின்றன அதிகம் நோயுற்றுவிட்டதாய் பூமி அலுத்துக்கொள்கிறது அனைந்த நட்சத்திரங்கள் நங்கூரமிட்ட படகு மற்றும் உன் சோபிதம் நிரம்பிய கண்கள் சம்மதத்தின் துயரமானது பூமியின் நாட்பட்ட கடமைகளைக் கொண்டிருக்கும் போது வானில் விசிறி எறிந்தேன் ஒரு பிடிபட்டபறவையைப் போன்ற என் காதலை தப்பிச்செல்லும் உன் குதூகலம் அல்லது ஒரு கூர்நகக்கீறல் உன்பாதங்களைக் குறுக்கும் வழிநடையில் அல்லது மீன்களுக்கான கனவில் பூனைகள் சோம்பலிடும்…
ஆர்த்தெழும் பெண் குரல்
அறிமுகம் எளிய அழகிய மொழியில் விடியலைத் தேடியபடி ஆரம்பமாகிறது, ‘கடல் முற்றம்’. சென்னை மோக்லி பதிப்பக வெளியீடாய் கிண்ணியா எஸ். பாயிஸா அலியின் 50 கவிதைகளின் தொகுப்பாய் 2017 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. கவிஞர் அனாரின் கனதியான முன்னுரையுடன் வெளிவந்த இந்நூலை முஹம்மத் முஸ்டீன் - ஷாமிலா ஷெரீஃப் முஸ்டீன் தம்பதியர் தமது ஷெய்ஹ் இஸ்மாயீல் ஞாபகார்த்தத் தயாரிப்பகத்தின் (SIM Production) மூலம் கொழும்பில் மிகவும் விமரிசையாக வெளியிட்டு வைத்தார்கள். ஃபாயிஸா அலி பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியை, கவிதாயினி,…
வயலூறும் ஆட்டுரமும் மாட்டுரமும்
முல்லை நில மக்களின் வாழ்வியலைச் சொல்லும் முல்லைக்கலியில் எருமைகளை வளர்ப்பவர்களை ‘கோட்டினத்தார்’, பசுவை வளர்ப்பவர்களை ‘கோவினத்தார்’, ஆடுகளை வளர்ப்பவர்களை ‘ஆட்டினத்தார்’ என மூன்று வகையான ஆயர்ச் சமுதாயம் இருந்ததாகச் சங்க இலக்கியம் சொல்கிறது. நீட்டுரமும் தேட்டுரமும் நெல்லுரமும் ஆகையினால் ஆட்டுரமும் மாட்டுரமும் வயலுரங் காண் ஆண்டே என்ற பாடலில் ஆடு மாடுகளின் கழிவுகளை உழவு நிலத்திற்கு உரமாகப் பயன்படுத்தினார்கள் என்கிறது சங்கப் பாடல். கி.ராவின் மிகச்சிறந்த படைப்பான கிடை என்னும் குறு நாவல் இடையர் இனத்திற்கிடையே உள்ள சமூக உறவுகளையும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் நுட்பமாகப்…
He Shan சீனக் கவிதைகள்
அவனது வாகனத்தை தேர்ந்தெடுக்கிறோம் முன்னரே வந்த எதிரொலியின் சாயலில் இடர்பாட்டின் வண்டியில் சுற்றிச் சுற்றி வீசப்படுகிறோம் காட்டுப் பூக்கள் கீதமிசைக்கும்போது நாங்கள் அந்தக் கீதங்கள் வழியாக நடக்கிறோம் சூரியன் நீண்ட நிழல்களைப் படர்த்தும்போது ஓடையில் இருந்து பருகும் கனவுகளை கனவுகாண்கிறோம் இலையுதிர்காலத்தில் இலைகள் உதிர்ந்து விழும்போது குளிர்காலத்தின் வண்டியில் நெருங்கி ஒருவரையொருவர் கேட்கிறோம் நாம் ருசிப்பது வாழ்வின் வசந்தம் நாம் வாழும் வாழ்வோ அவசரம் அவனது வண்டியில் நாம் சவாரி செய்கிறோம். மரணத்தின் வண்டி அது வண்டியோட்டியின்…
தயாஜி கவிதைகள்
பொம்மி என்ன பெயர் அது யாரின் பெயர் அது என எப்போதுமான கேள்வி ஒன்று என்னை துரத்திக்கொண்டே இருக்கிறது இனிமேலும் ஓட முடியாது ஓடுவதற்கு தூரமும் கிடையாது ஒரு குழந்தையை நீங்கள் எப்போது தூக்கிக் கொஞ்சினீர்கள் எப்போது கண்டித்தீர்கள் எப்போது குதிரை ஏறி விளையாட்டு காட்டினீர்கள் எப்போது சிரிக்க வைத்தீர்கள் உங்கள் உள்ளங்கை குழந்தையின் சூட்டை எவ்வளவு நேரம் சேமித்தது எனக்கு இன்றுவரை அது சேமிப்பிலேயே இருக்கிறது கூடவும் இல்லை குறையவும் இல்லை கொஞ்சமும் மாறாத…
சித்துராஜ் பொன்ராஜ் கவிதைகள்
Harlem-இல் லோர்கா ஒரு கறுப்பனின் மரணத்திற்கு ஃப்ளெமெங்கோ பாணி பாடல்.. இந்த நகரம் என்னும்                     கைத்துப்பாக்கி                  உன்னையும் என்னையும்              நிரந்தரமாய்க் குறிபார்த்தபடி                             இருக்கிறது.    நல்லதொரு கைத்துப்பாக்கி         அமைவதைப் போலவே                   கைக்கு வாகாய்     ஒரு நகரமும் எல்லோருக்கும்    அமைவது                              அவசியம்,                      ஒரு நாத்திகனுக்கு      எதிர்ப்பதற்கு வாகாய்         ஒரு கடவுள்        அமைவதுபோல் -                                என்னைக் கொலை        …
தில்லை கவிதைகள்
கோப்பத்தை   நான் விசர் பிடித்து உழத்துகிறேன் பாலியத்தின் மையத்தில் மோதுண்டு எழும் பேய்க்காற்று என்னை உசுப்பி உசுப்பி என் கமுகிலிருந்து பாக்கும், கோப்பத்தையும் கொட்டுகின்றன சாமத்தியக் குடத்திலும் கண்ணகியின் மடையிலும் விரிந்திருந்த கமுகம் பாளைகள் மின்னி மின்னி பூச்சியாய் பறக்கின்றன ஓம் என் சூத்து தேயுமட்டும் கிறவல் றோட்டில் இழுபடும் கோப்பத்தை எனக்குள் விரிந்து விரிந்து மண்டைக்குள் உராய்ந்து என் காதோரமாய் கிணுகிணுக்கின்றன எங்கள் ரயில் வண்டியில் பின்பக்கமிருந்த குமாரி குடைசாய என்…
You Yipiao Poems – சீனக் கவிதைகள்
Global Similarities        Translated by Fan Jinghua   One thousand and one nights of the Grand Master’s Supplemented with numerous screens The calculable everydayness of his Has a great variety of patterns With the same themes or motifs Weaving a hundred-pieced quilt for the audience And inside Always the same way is used To envelop the fantasy of a youngster And roll it…

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]