Skip to content Skip to footer

வெற்றிச்செல்வன் இராசேந்திரன்

கீதாரியின் உப்புக்கண்டம் கவிதைகள்

1 ஆடுகள் வலசை போகையில் குட்டிகளை ஈன்றுவிட்டால் இடையனுக்குச் சுமை தெரியாது மாடுகள் காளைக் கன்றுகளை ஈன்றுவிட்டாலும் சுமையாகத் தெரியாது இதோ இந்தக் கராமறையாடு வலசை போகையில் ஈன்றது என்றும் இதோ இந்தக் கிளிக்கொம்பாடு அந்தி மறைகையில் ஈன்றுது என்றும்! இதோ இந்தக் காரிக்காளை ஒரு மதிய நேரத்தில் உச்சிவெயிலில் பிறந்ததென்றும் நினைவில் வைத்துக்கொள்வான் சுமை யெல்லாம் நீரின்றி வறண்டு கிடக்கும் இந்தக் குளத்திலும் வாடிக் கிடக்கும் அந்த நிலத்திலும் தான் 2 இடைச்சியே வா…! வந்த பாதையை நோக்கித் திரும்பப் போவோம். நாம் போக வேண்டிய பாதை இதுவல்ல. வழியில் எங்காவது ஆலமரமோ ஐயனாரோ இருந்தால் காட்டுப்பேச்சி சாட்சியாக மீண்டும் திருமணம் செய்து கொள்வோம் மை போலிருக்கும் கருவிளம் பூக்களை…

மேலும் வாசிக்க

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]