Skip to content Skip to footer

thinaigal

கார்த்திக் திலகன் கவிதைகள்

1) குளத்தின் மேற்பரப்பில் சொற்களைப் பரப்பி வைத்து கரையில் அமர்ந்து கல்லெறிகிறேன் அழகழகாய்த் தெறிக்கின்றன சொற்கள் 2) பூமி ஓர் இடத்தில் துக்கத்தில் கசிந்தது மரங்களின் எல்லா இலைகளும் துக்கமாக இருந்தன வானம் லேசாகத் தூரலிட்டு அழத் தொடங்கியது ஏனின்று உலகம் துக்கமயமாக இருக்கிறது என்று கேட்டேன் சந்தோஷங்கள் அனைத்தும் இன்று துக்கத்தின் வேடம் தரித்து நடித்துக் கொண்டிருக்கின்றன என்றார்கள் சந்தோஷங்களுக்கு இப்படி ஓர் ஆசையா 3) அ) புயல் காற்றையும் இளங்காற்றையும் அந்த மரம் ஒரே…

மேலும் வாசிக்க

கதிர்பாரதி கவிதைகள்

சலோமியின் மீன் பருவக் கண்கள் 1 யேசுவின் மூன்று சீடத்திகளில் ஒருவள் சலோமி. யேசு உயிர்த்துவிட்ட பிற்பாடும் ‘கல்லறையில் யேசுவைக் காணவில்லையே’ எனக் கலங்கிய மூவருள் ஒருவள் சலோமி. இல்லையில்லை யேசுவின் காதலிகளில் ஒருத்தியே சலோமி. அவையெல்லாம் கிடையாது, சலோமி என்பவள் யேசுவின் பன்னிரு சீடர்களில் இருவருக்கு அம்மா. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை யேசுவின் தாய் அருள்நிறைக் கன்னி மரிக்கு நேரிளையத் தங்கையவள். ஆக, அவள் யேசுவுக்கு அருள்நிறைச் சித்தி. இவையெதுவும் உண்மையல்ல கன்னி மரிக்குப் பிரசவத் தொண்டுசெய்த…

மேலும் வாசிக்க

திணைகள் கவிதை விருது அறிவிப்பு

திணைகள் கவிதை விருதுக்கு நவீன கவிதை நூல்கள் வரவேற்கப்படுகின்றன இந்த முறை 2023 மற்றும் 2024ஆம் ஆண்டில் வெளிவந்த நூல்களுக்கும் சேர்த்து ஒரே விருதாக வழங்கப்படுகிறது. இந்த இணைப்பில் தங்களது விவரங்களைப் பதிவு செய்துவிட்டு நூல்களை அனுப்பவும்.  https://tinyurl.com/jewrkz3n நூல்களை 10 மார்ச் 2025 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டிய முகவரி:  Old No.72, New No.3 Kumaran Road II, Main Road, Chinmaya Nagar, Chennai 600 092 விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட…

மேலும் வாசிக்க

ஆனந்த் குமார் கவிதைகள்

1. ஒரு நதிக்குள் நிறைய நதிகள் இருக்கின்றன அதில் ஒன்று ஒரு மூலையில் கூழாங்கற்களை ரகசியமாய் சேகரித்துக்கொண்டிருக்கிறது ஒன்று கரையை எட்டியெட்டிப் பார்க்கிறது ஒன்று பாறையில் ஏறி வழுக்கி விழுகிறது சிலதுகள் அமைதி சிலதுகள் சேட்டை ஒன்றிற்கு நீச்சல் தெரியவில்லை ஒன்றிற்குப் பாடத் தெரிகிறது ஒன்றை ஒன்று முந்துகிறது ஒன்றை ஒன்று பிடித்து இழுக்கிறது குழந்தைகள் கூட்டமாகச் சென்றாலும் குழப்பமாக இல்லை கூட்டமாகச் செல்லும் நதிகளைத்தான் நாம் நதி என்கிறோம் 2. மழை பெய்துகொண்டிருந்த ஊரிலிருந்து மழை…

மேலும் வாசிக்க

நிலா கண்ணன் கவிதைகள்

வருவதற்கு இன்னும் ஒரு வருடம் ஆகலாம் உனக்கும் எனக்குமிடையில் நீளும் இச்சுவர்களில் உப்பின் ஈரம் பூத்திருக்கின்றது உனக்கு எத்தனை முறை சொல்வது.!? உன் மனம் மயில் அகவுவதைப்போல ஒலியெழுப்பிக்கொண்டிருக்கிறது நீயோ குனிந்த தலை நிமிராது கூடை முடைந்து கொண்டிருக்கின்றாய் பூவை தீபத்தில் அழுத்தி ஒளியின் மூச்சை நிறுத்தி வைத்துவிட்டு சிறிது கண்ணடை தூதுக்கு இவ்விடம் பறவையேதுமற்று இருக்கின்றது வௌவால்களின் வழியே அனுப்பியிருக்கிறேன். வழியில் கனியைக் கண்டு அவையும் தலைகீழ் பற்றாற்றலாம் விடியும்முன் வந்தடையும் அந்தப்பாலூட்டிகளின் மார்பில் முட்டி…

மேலும் வாசிக்க

ரவி அல்லது – கவிதைகள்

சச்சரவு. வெகு தூரம் வந்துவிட்டதாக விசனத்தின் வலியில் துடித்தழுதபொழுது அவன் ஆழ்துயிலில் இருந்தான் கிழவி விழித்திருந்தாள் வீடு அசைந்தாடியது காற்றின் போக்கில். *** பிரவாகம். இறுதி செய்யப்படாத எல்லா பிணக்குகளிலும் அவள் பூ முடைகிறாள். அவன் பூக்கொய்கிறான். குழந்தை சலிப்படைகிறது காத்திருத்தலின் பொருட்டாக. *** தோள் நிற துயரம். ஒவ்வொரு முறையும் சிரேஷ்ட குமாரர்களின் மிருக வதையெனும் மீட்சிக்கு. மனிதனுக்குதான் களிம்பிட வேண்டியதாகிறது வாளிப்பான பசுவிற்கு முன்னால். *** பாத…

மேலும் வாசிக்க

மலேசியா ஏ.தேவராஜன் கவிதைகள்

சக்கை வெயிற் பொழுதின் தகிப்பிலொரு காங்கையில் வெக்கையும் வேர்வையும் மூச்சிறைப்புக்குமிடையே பல நாட்களும்.... கடும் மழை கொடுங்குளிர் நரம்பறுக்கும் நாளைய கனவுகளுடன் தள்ளாட்ட நடையிலாங்கு ஒட்டி உலர்ந்த என்பினூடே சுமைபொதியுடன் நகருமவன் கழுதையுமல்ல குதிரையுமல்ல நெய்குடி வண்டியுமல்ல .... புலர்வேளை தொடங்குமுன்னே ஆறேழு பசித்த வயிறுகளை... வயிற்றுக்கப்பால் அழுத்தும் தவிர்க்கவியலாத் தேவைகளை... நெஞ்சில் புதைத்தேகும் நகரோரத் தெருக்களில் விட்டெறியப்பட்ட…

மேலும் வாசிக்க

அனார் கவிதைகள்

சுலைஹா மேலும் உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றால் நான் அர்த்தங்களுக்கு வெளியே வளர்பவள் கல்லும் கல்லும் மோதிவரும் நெருப்புப் பொறிகளால் உருவானவள் இங்கிருந்தும் அங்கிருந்தும் தாவுகின்ற மின்னொளி கடந்தகால சாபங்களிலிருந்து மீண்டவள் எதிர்காலச் சவால்களை வென்றவள் ஒட்டகங்களைப்போல் மலைகளைக் கட்டி இழுத்துவரும் சூனியக்காரி ஒளியை அணிந்திருப்பவள் உப்புக் குவியலைப்போல் ஈரலிப்பானவள் “இறுமாப்பு“ என்னும் தாரகைகளாக வீசியெறிந்திருக்கிறேன் என் பருவங்களைக் கண்களிலிருந்து காதலை பொழியச் செய்பவள் கனவுகள் காண ஏங்கும் கனவு நான் என் உடல் செஞ்சாம்பல்…

மேலும் வாசிக்க

கடல் நாகங்கள் பொன்னி பற்றி எம்.சேகர்

கவிதை மனம் சார்ந்தது. அது கண நேர உணர்வுகளின் வலிகளின் வடிகாலாக வெளிப்படுவது. இவையே இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகளில் எங்கும் நிறைந்திருக்கின்றன. சிங்கப்பூர்க் கவிதை என்பது இதுவரை எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம் விமர்சிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் இந்த ஆண்டு இலக்கியப் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தொகுப்புகளில் உள்ள கவிதைகள் சமகால உலக தமிழ்க் கவிதைச் சூழலில் மிகவும் அழகான கவிதை படைப்புகளாக வெளிவந்திருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. இன்பா, மகேஷ்குமார், மதிக்குமார் இந்த மூவரின் படைப்புகளும் சமகாலக் கவிதைச் சூழலில்…

மேலும் வாசிக்க

பெரு.விஷ்ணுகுமார் கவிதைகள்

மே-சொல்லிகள் பாதையை மறித்தபடி மந்தமாகச் செல்லும் மே-சொல்லிகள் தாமாகவே விலகி வழிவிடட்டும் எனக் காத்திருந்தேன். அதற்குள் அவை என்னையும் தங்களில் ஒருவராக நினைத்துக்கொண்டன போலும். எல்லாவற்றுக்கும் மே-சொல்வதென்பது எளிமையானது மட்டுமல்ல சௌகர்யமானதும்கூட எல்லா பொதிகளையும் ஒரே வண்டியில் ஏற்றலாம். எல்லா பூக்களுக்கும் ஒரே வண்ணமிடலாம் யாராவது வந்து மீட்டெடுக்கும்வரை வழிமொழியப் பழகாதொரு பள்ளத்தாக்கினை செப்பனிட்டுக் கொண்டிருக்கலாம். இப்போது மொத்த கூட்டமும் வலப்புறம் திரும்புகிறது எதையும் கண்டுகொள்ளாமல் நிற்கும் நான் அங்கிருந்து நழுவி நேராகச் செல்கிறேன்…

மேலும் வாசிக்க

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]