Skip to content Skip to footer

thinaigal

காஞ்சி – சேரன் கவிதைகள்

1. நினைக்க மறுப்பவை நைல் நதி ஊற்றெடுக்கும் இடத்துக்குச் சென்றோம் போகும் வழியில் இருநூராயிரம் அகதிகள். பார்த்தோம்: உருவமற்றிருந்த தெருவோரம் குருதி கறுத்து எஞ்சியிருந்த பாதி உடல். அதிர்ச்சியில் நெஞ்சு பிளந்து மரித்த ஒரு பெரும் பறவை. பெரிய கொம்புகளோடு தலை துண்டிக்கப்பட்டு விற்பனைக்குக் கிடந்த ஆநிரை. ஊற்றின் மெல்லொலி எழுப்பிய வியப்புடன் திரும்பி வருகிறோம். அப்போது ஈழத்தில் புன்முறுவலுடன் அகங்கார படையணியின் முன் முகப்பைச்…

மேலும் வாசிக்க

ரா. ராகுலன் கவிதைகள்

ஓடும் காற்று குறைந்தது ஆயிரம் மனிதர்களைச் சந்திக்க வேண்டும் ஆயிரம் சாலைகளில் நடக்க வேண்டும் ஆயிரம் மரங்களின் வேர்களில் அமரவேண்டும் ஆயிரம் முறை சண்டையிட வேண்டும் ஆயிரம் ஆயுதங்களையும் கவசங்களையும் உருவாக்கி வைத்திருக்க வேண்டும் ஆயிரம் ஊர்களைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும் ஆயிரம் நினைவுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் ஆயிரம் வாழ்க்கையை வாழ வேண்டும் ஆயிரம் நூல்களை வாசிக்க வேண்டும் ஒரு நூறு பெண்களை அறிந்துகொள்ள வேண்டும் சூம்பிப்போய் கிடக்கும் என் வாழ்க்கையில் எழுந்து நடக்க இப்போது இந்த…

மேலும் வாசிக்க

முத்துராசா குமார் கவிதைகள்

1 சாணி மொழுகப்பட்ட சொளகின் மேடு பள்ளங்களாக முடையப்பட்டுள்ளது உயிர்.   2. மட்டைகளை உரித்து உரித்து கைரேகைகளை  இழந்த மகத்தான தேங்காய் உரியாளன் தன்னுடைய ஒரு கோடியாவது தேங்காயை கடப்பாறையின் தாயான கழுமரத்திலேறி உரிக்கிறான்.  3.  நிலா மங்கிய நாளில் வெள்ளரிப்பிஞ்சுகள் களவாங்க சும்மா கொடிகளுக்குள் சாக்கோடு நெளிந்தேன். தப்பிக்கையில் இடத்துப்பெரியாம்பளையிடம் ஆம்பட்டேன் எனது எளுறுக்கு புகையிலை கொடுத்து தனது களவுச்சரிதங்களை நடுக்கமெடுத்து வாசித்தார் விடிந்து வழியனுப்புகையில் வெடித்த வெள்ளரிப்பழத்தை கோரை படுக்கையிலிட்டு கைக்குழந்தையாகத் தந்தவர் விதைகளை…

மேலும் வாசிக்க

வீரான் குட்டி கவிதைகள்

கனவில்  புழுவாய் உறங்கிய நான் விழித்தபோது வண்ணத்துப்பூச்சியாக  கனவில் யார் முத்தமிட்டது  வாழ்வு உதிர்ந்து போவதில் வருந்துவது ஏன்? அடர்வதற்கும் விழுவதற்கும் இடையிலான நொடிப்பொழுதில் ஒரு பறவை அதன் வாழ்வை வாழ்வதில்லையா? கண்டபோது கனவில் சொன்ன வார்த்தைகளில் மனம் பூத்துப் போனது கண்டபோது சொல்லாத வார்த்தையில் இல்லாமல் போகிறேன் இறந்தவரின் வீடு தாஜ்மஹால் ஆவதில்லை உலகத்தின் எந்த வீடும் ஆனால் எந்த வீடு தாஜ்மஹால் ஆகின்ற ஒரு…

மேலும் வாசிக்க

நேசமித்ரன் கவிதைகள்

ஊமத்தையும் மருத்தோன்றியும் அருகருகில் ஒன்றை அரைத்தால் உன் கந்தகமௌனம் மற்றது உனது முத்தத்துக்கு முந்தையச் சொல் உறிஞ்சப்படும் கஞ்சா கங்கின் செந்திறப்பு கொதிக்கும் ஓரிதழ் தாமரையின் திரட்சி முன்னது வெட்கினேன் என்று பிறகு சொல்லும் கணம் பின்னது உனக்கு கடவுச்சொல் மறந்த கண்ணாடி அறை அழுக்கை முத்தாக்கும் சிப்பியை ருசித்துண்ணும் கடல் நிலத்தவனுக்கும் சிறிய சினச் சொல்லண்ண உதிரவாசனைக்கு நீர்த்திமிரும் சுறாவுக்கும் ஆன பனிப்போரில் கஞ்சா கங்ககென வால்நட்சத்திரம் எறிந்து விளையாடுகிறது…

மேலும் வாசிக்க

அஷ்ரப் கவிதைகள்

சுழற்சி அநேக பொழுதுகளில் தூங்கி தூங்கி வழிகிறாள் அம்மா தூக்கத்தில் புன்னகைப்பதாக ஒருமுறை அடுத்தவீட்டு அக்கா சொன்னாள் கழிவறையில் தண்ணீரைத் திறந்து மூடாமல் அப்படியே பார்த்துகொண்டே நிற்கிறாள் உடையை பத்து முறையாவது மாற்றச் சொல்லி தினமும் அடம்பிடிக்கிறாள் காலையா? மாலையா? தெரியாமல் குழம்புகிறாள் ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்கிறாள் சாப்பிட்டு முடித்து சித்த நேரத்தில் சாப்பாடு போடச் சொல்கிறாள் முணுமுணுத்தபடி கடவுளிடம் ஏதாவது வேண்டிக் கொண்டே இருக்கிறாள் வீட்டில் காணாமல் போகும் பல அவளது…

மேலும் வாசிக்க

ப.அ.ஈ.ஈ அய்யனார் கவிதைகள்

1 ஊருக்கு தெக்க ஒசந்திருச்சு கட்டிடம் ஒத்தப்பனையெல்லாம் செத்தப்பனையாச்சே ஊத்துப் போன வாய்க்காலும் நாத்துப் பாவிய நெல்வயலும் வித்துப் போச்சே விலைமகனுக்கு களையெடுத்த கைகளை கனலிட்டு சுட்டுவிட்டான் கார்ப்பரேட் நலவாதி... அரமரக்கா நெல் வெதச்சு ஆடயுங்கோடயும் கதிரறுத்து ஆதிக்கும் அய்யனுக்கும் படியளந்து கையெடுக்கும் சிற்றூரைச் சிதைத்துவிட்டான் சிங்காரக் கோமாளி... நான் பார்த்த நடுகையும் குலவைச் சத்தமும் குத்துக்காலிடும் நாற்று முடிகளும் பூசிமெழுகிய வரப்பும் சாம்பல் நாரையும் சில்வண்டும் சிவந்த அரிவாள் நண்டும் நீர்த்தும் நத்தைக் கவுச்சியும் மீன்…

மேலும் வாசிக்க

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]