ஞாயிற்றுக்கிழமை இரவு அலாரத்தை வைக்கும்போதே திங்கட்கிழமையின் காலடியோசைக் கேட்டுவிடுகிறது. அதிகாலை ரயிலில் ஏறும்போதே எல்லோரும் ஏதோ ஒன்றை வீட்டிலேயே விட்டுவந்தவர்களைப்போல அமைதியாகக் குனிந்தபடி தங்களுடைய வாழ்க்கையைக் கைப்பேசித் திரையில் தேடிக்கொண்டிருக்கிறார்கள். காபிக்கடைகளில் கோப்பைகள் சூடாக இருக்கின்றன. அவற்றைப் பிடித்திருக்கும் கைகளில் ஞாயிற்றுக்கிழமையின் குளிர் இன்னும் மிச்சமிருக்கிறது. திங்கட்கிழமைகளில் நகரம் ஒரு பெரிய கடிகாரமாகிவிடுகிறது. மாலை வரைக்கும் எப்படியாவது சமாளித்துவிடென ஒவ்வொரு நிலையமும் ஒரு முள்ளாகி யாரோ ஒருவரின் நேரத்தைக் கச்சிதமாக நகர்த்திக்கொண்டிருக்கிறது. இந்தத் திங்கட்கிழமையை மிகவும் வெறுப்பவர்கள்…
துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் கொள்கலன் கப்பல்களைப் பார்த்து கடலில் மேயும் இரும்பு யானைகள் இவை என்கிறேன். உலகம் தின்று முடிக்க முடியாமல் கரையெங்கும் சிதறிக்கிடக்கும பேராசைகளின செவ்வக எலும்புகள் இவை என்கிறான். ரயில் நிலையத்தின் நகரும் படிக்கட்டில் ஏறியபடி இந்த நகரம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்கிறேன். நேற்றைய மனிதர்களின் தோல்களை உரித்துத் தைத்து தன்னையே இழுத்துச் செல்லும் நெடிய பாம்பு என்கிறான். அடுக்குமாடிகளின் ஒளிரும் சன்னல்களைப் பார்த்து தரையில் குடியேறிய விண்மீன்கள் இவை என்கிறேன். ஒவ்வொரு சன்னலுக்குள்ளும்…
1. அன்புமலர்
என் அம்மாவிற்கு இரண்டு கைகள் இருந்தன அவை, அடுப்பில் கொதிக்கும் எதையோ கிளறின முறத்தை ஆட்டியாட்டி பயிர்களைப் புடைத்தன தேங்காய் நாரினால் கிண்ணங்களைக் கழுவின ஊதா நிறத்துச் சோப்பினால் துணிகளைத் துவைத்தன மாவில் நீரூற்றிப் பிசைந்து உருண்டைகளாய் உருட்டின. என் அம்மாவிற்கு இரண்டு கால்கள் இருந்தன அவை வாசலுக்கும் கொல்லைக்குமாய் நடந்து நடந்து களைத்தன பித்தளைக் குடங்களை இடுப்பில் ஏற்றி ஏற்றி இறக்கின அவித்த நெல்லைக் கொட்டி சுற்றிச்…
இணையத்தில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோது லி சிங்சோவ் (Li QingZhou) பற்றிய தகவல்களைப் படிக்க நேர்ந்தது. சமீபத்தில் தேசிய நூலகத்திற்குச் சென்றபோது எதார்த்தமாகக் கண்ணில் பட்ட பண்டைய சீனக் கவிஞரான லி சிங்சோவ் பற்றிய நூல் வாசிப்பதற்குச் சுவாரசியமாக இருக்க உடனே எடுத்துவந்தேன். கடந்த ஆயிரமாண்டுகளில் சீனாவின் சொங் வம்சத்தைச் சேர்ந்த முதல் பெண் கவிஞராக அறியப்படுகிறார். பண்டைய காலச் சீனாவில் டாங் வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, சீனா தொடர்ச்சியாக நடந்த போரினால் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளை…
பல்லூழிக் காலப் பெரும் பூ என் அன்னை கிளம்பும் போது அவள் கைகளில் இருந்த பழம்பெரும் பூங்கொத்தை எனக்குக் கொடுத்துச் சென்றாள் நான் அதிலிருந்த பூ ஒன்றின் சிறு விதையை என் வீட்டுத் தொட்டியில் பதியமிட்டேன் மெல்ல கண் விழித்தது ஆயிரமாண்டு தாவரம். பின்பு ஒரு நாள் நான் கிளம்பும் முன்பு அதில் பறித்த மலர்கொண்டு ஒரு பூங்கொத்து தயாரித்து உன் கைகளுக்குத் தருவேன் அதைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் மகளே என் கோடி நூற்றாண்டுப் பூவே! என்…
நம் இயற்கையும் இயல்புகளும் என்ற கருப்பொருளில் சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2024 சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளான சீனம், மலாய், தமிழ் மற்றும் ஆங்கிலம் என நான்கு மொழிகளிலும் நவம்பர் 8 முதல் 17 வரை நடைபெற்று முடிந்தது. இந்த ஆண்டு எடுத்துக்கொள்ளப்பட்ட நாடு கொரியா மற்றும் கொரிய இலக்கியம் பற்றி பேசுவதற்கான முக்கியத்துவம் வழங்கப்பட்டது. கொரிய இலக்கியத்திற்கும் சிங்கப்பூரின் இலக்கியத்திற்குமான தொடர்பு குறித்த உரையாடல் நடைபெற்றது. இந்த உரையாடலில், சிங்கப்பூர், கொரியா மற்றும் புலம்பெயர்ந்தோர் இடையே உள்ள…
சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளான ஆங்கிலம், சீனம், மலாய் மற்றும் தமிழ் மொழிக் கவிதைகளைக் கவிதை ஆர்வலர்களுக்கிடையே அறிமுகம் செய்து சிங்கப்பூர்க் கவிதைகளை அடையாளப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இவ்வாண்டு சிங்கப்பூர்க் கவிதை விழா கவிதைசார் நிகழ்ச்சிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பத்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இவ்விழா ஜூலை 26 முதல் 28 வரை மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. பன்மொழிக் கவிஞர்களுடன் தொடர் கவிதை வாசிப்பு, புதிதாக வெளியீடு கண்ட நூல்கள் அறிமுகம், பிற மொழிக் கவிஞர்களின் நூல்கள் விற்பனை,…
1) அந்த வளாகத்தைச் சுற்றி வளைத்துவிட்டார்கள் நேற்று முதன் முதலில் இடது பக்கச் சுவர்களை உடைத்தார்கள் பாதையோர மரக்கிளைகள் முறிந்து இலைகள், பூக்கள் நசுங்கின நீள்வட்ட சக்கர வாகனம் உருண்டு சென்றது மேற்கூரைகளை இடிக்க கடகட சத்தத்துடன் தூண்கள் சரிந்தன சிமிண்டுக் குவியல் தூசியைக் கிளப்பியது உடைத்து நொறுக்கிய சுண்ணாம்புச் சில்லுகளை வண்டியில் அள்ளிப்போட்டுச் சென்றார்கள் இன்று காலை இங்கு புதிதாக முளைத்திருக்கிறது புற்தரை இங்கு ஒரு கட்டடம் இருந்தது அது இருந்த இடமிருக்கிறது 2)…
1. நீண்ட பலகாரத்தை முன்வைத்து ஓர் உரையாடல் அடர் காவி நிறத்தில் கச்சிதமாய்ப் பிடிக்கப்பட்டதொரு மோதி லட்டுதான் இன்றைய இந்தியா என்கிறாய் காலங்காலமாய்த் தட்டில் வைத்து நீட்டப்படும் ஒரு குத்து கலர் பூந்தியல்லவா இந்த தேசம் 2. பிராதும் மறுமொழியும் தீவிரங்களைச் சிதைக்கிறது என்பது தானே பகடி மீதான உன் விசனம் இரண்டு கேள்விகள் உன்னிடம் ஒரு பகடிக்கே நீர்த்துப் போகுமெனில் அது என்ன தீவிரம் தவிர ஒரு…
இகவடை பரவடை - குறுங்காவியம் - ஷங்கர் ராமசுப்ரமணியன் -இன்பா //அவளுக்கு இதே சேயாற்றின் இன்னொரு கரையான சிந்து பூந்துறையில் சிதையூட்டி விடைகொடுத்தேன் அப்போது நதி காட்டியது எனக்குக் கருப்பு// ** //பானையைத் தோளில் தாங்கி அம்மாவைச் சுற்றும்போது ஒரு சுற்றுக்கு ஒரு துளை இட்டார்கள் பானை அழுது உகுத்தநீர் எனக்கு முதல் நீராகக் குளிர்ந்தது வனைந்தவை எல்லாம் போட்டு உடைக்கப்படுகிறது// ** //குச்சிகால்கள் கூம்பிச்…

