Skip to content Skip to footer

இன்பா

வாரணாசியின் எரியும் தகனப் படித்துறைகள் – சுதீப் சென்

        எரியும் பிணங்களின் அதீத வெப்பத்தில் கனன்ற சிதைகள் கங்கையின் முகத்தை என் பார்வையிலிருந்து ஓரளவு மறைத்தன. வேகமாகச் சேறு சுமந்து சுழலும் நீர் மிதக்கும் தீபங்களையும், நீராடும் உடல்களையும், சிதைந்த பிணங்களின் எச்சங்களையும், சதை, எலும்பு, சாம்பல் ஆகியவற்றையும் தன்னோடு சுழற்றிச் செல்கிறது. மணிகர்ணிகா படித்துரையில் புனிதமும் துர்நாற்றமும் கலந்த வாசனை வண்டல் மண்ணிலிருந்தும் மரச் சட்டங்களிலிருந்தும் மேலெழுந்து வருகின்றன. எரிந்துகொண்டிருக்கும் நெருப்பில் மனித உடல்கள் மெல்லச் சிதைவடைகின்றன. அவற்றின்…

மேலும் வாசிக்க

கவிதையியல் – ஆர்ச்சிபால்ட் மக்லீஷ்

 ஒரு கவிதை தொட்டுணரக்கூடியதாகவும், மௌனமாகவும் உருண்டு திரண்ட ஒரு கனியைப் போல் இருக்க வேண்டும் ஊமையாக, பெருவிரலின் வருடலால் தேய்ந்து மழுங்கிய பழைய பதக்கங்களைப் போல் இருக்க வேண்டும் மௌனமாக, பாசி படர்ந்த சன்னல் விளிம்புகளில் கைமுறிந்த கல்லைப் போல் இருக்க வேண்டும் ஒரு கவிதை பறவைகளின் பறத்தலைப் போல சொற்களற்றதாக இருக்க வேண்டும்            * ஒரு கவிதை காலத்தால் அழியாததாக இருக்கவேண்டும் நிலவு மேலேறிச் செல்வதுபோல்.…

மேலும் வாசிக்க

திங்கட்கிழமையின் கைப்பையில் ஞாயிற்றுக்கிழமையை ஒளித்து வைத்திருக்கிறேன்

 ஞாயிற்றுக்கிழமை இரவு அலாரத்தை வைக்கும்போதே திங்கட்கிழமையின் காலடியோசைக் கேட்டுவிடுகிறது. அதிகாலை ரயிலில் ஏறும்போதே எல்லோரும் ஏதோ ஒன்றை வீட்டிலேயே விட்டுவந்தவர்களைப்போல அமைதியாகக் குனிந்தபடி தங்களுடைய வாழ்க்கையைக் கைப்பேசித் திரையில் தேடிக்கொண்டிருக்கிறார்கள். காபிக்கடைகளில் கோப்பைகள் சூடாக இருக்கின்றன. அவற்றைப் பிடித்திருக்கும் கைகளில் ஞாயிற்றுக்கிழமையின் குளிர் இன்னும் மிச்சமிருக்கிறது. திங்கட்கிழமைகளில் நகரம் ஒரு பெரிய கடிகாரமாகிவிடுகிறது. மாலை வரைக்கும் எப்படியாவது சமாளித்துவிடென ஒவ்வொரு நிலையமும் ஒரு முள்ளாகி யாரோ ஒருவரின் நேரத்தைக் கச்சிதமாக நகர்த்திக்கொண்டிருக்கிறது. இந்தத் திங்கட்கிழமையை மிகவும் வெறுப்பவர்கள்…

மேலும் வாசிக்க

நகரத்துறவி

துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் கொள்கலன் கப்பல்களைப் பார்த்து கடலில் மேயும் இரும்பு யானைகள் இவை என்கிறேன். உலகம் தின்று முடிக்க முடியாமல் கரையெங்கும் சிதறிக்கிடக்கும பேராசைகளின செவ்வக எலும்புகள் இவை என்கிறான். ரயில் நிலையத்தின் நகரும் படிக்கட்டில் ஏறியபடி இந்த நகரம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்கிறேன். நேற்றைய மனிதர்களின் தோல்களை உரித்துத் தைத்து தன்னையே இழுத்துச் செல்லும் நெடிய பாம்பு என்கிறான். அடுக்குமாடிகளின் ஒளிரும் சன்னல்களைப் பார்த்து தரையில் குடியேறிய விண்மீன்கள் இவை என்கிறேன். ஒவ்வொரு சன்னலுக்குள்ளும்…

மேலும் வாசிக்க

இன்பா கவிதைகள்

1. அன்புமலர் என் அம்மாவிற்கு இரண்டு கைகள் இருந்தன அவை, அடுப்பில் கொதிக்கும் எதையோ கிளறின முறத்தை ஆட்டியாட்டி பயிர்களைப் புடைத்தன தேங்காய் நாரினால் கிண்ணங்களைக் கழுவின ஊதா நிறத்துச் சோப்பினால் துணிகளைத் துவைத்தன மாவில் நீரூற்றிப் பிசைந்து உருண்டைகளாய் உருட்டின. என் அம்மாவிற்கு இரண்டு கால்கள் இருந்தன அவை வாசலுக்கும் கொல்லைக்குமாய் நடந்து நடந்து களைத்தன பித்தளைக் குடங்களை இடுப்பில் ஏற்றி ஏற்றி இறக்கின அவித்த நெல்லைக் கொட்டி சுற்றிச்…

மேலும் வாசிக்க

நான் எழுதவே விரும்புகிறேன் – லி சிங் சாவ்

இணையத்தில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோது லி சிங்சோவ் (Li QingZhou) பற்றிய தகவல்களைப் படிக்க நேர்ந்தது. சமீபத்தில் தேசிய நூலகத்திற்குச் சென்றபோது எதார்த்தமாகக் கண்ணில் பட்ட பண்டைய சீனக் கவிஞரான லி சிங்சோவ் பற்றிய நூல் வாசிப்பதற்குச் சுவாரசியமாக இருக்க உடனே எடுத்துவந்தேன். கடந்த ஆயிரமாண்டுகளில் சீனாவின் சொங் வம்சத்தைச் சேர்ந்த முதல் பெண் கவிஞராக அறியப்படுகிறார்.  பண்டைய காலச் சீனாவில் டாங் வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, சீனா தொடர்ச்சியாக நடந்த போரினால் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளை…

மேலும் வாசிக்க

இன்பா கவிதைகள்

பல்லூழிக் காலப் பெரும் பூ என் அன்னை கிளம்பும் போது அவள் கைகளில் இருந்த பழம்பெரும் பூங்கொத்தை எனக்குக் கொடுத்துச் சென்றாள் நான் அதிலிருந்த பூ ஒன்றின் சிறு விதையை என் வீட்டுத் தொட்டியில் பதியமிட்டேன் மெல்ல கண் விழித்தது ஆயிரமாண்டு தாவரம். பின்பு ஒரு நாள் நான் கிளம்பும் முன்பு அதில் பறித்த மலர்கொண்டு ஒரு பூங்கொத்து தயாரித்து உன் கைகளுக்குத் தருவேன் அதைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் மகளே என் கோடி நூற்றாண்டுப் பூவே! என்…

மேலும் வாசிக்க

சிங்கப்பூர் எழுத்தாளர் விழா

நம் இயற்கையும் இயல்புகளும் என்ற கருப்பொருளில் சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2024 சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளான சீனம், மலாய், தமிழ் மற்றும் ஆங்கிலம் என நான்கு மொழிகளிலும் நவம்பர் 8 முதல் 17 வரை நடைபெற்று முடிந்தது. இந்த ஆண்டு எடுத்துக்கொள்ளப்பட்ட நாடு கொரியா மற்றும் கொரிய இலக்கியம் பற்றி பேசுவதற்கான முக்கியத்துவம் வழங்கப்பட்டது. கொரிய இலக்கியத்திற்கும் சிங்கப்பூரின் இலக்கியத்திற்குமான தொடர்பு குறித்த உரையாடல் நடைபெற்றது. இந்த உரையாடலில், சிங்கப்பூர், கொரியா மற்றும் புலம்பெயர்ந்தோர் இடையே உள்ள…

மேலும் வாசிக்க

சிங்கப்பூர்க் கவிதை விழாவில் சீன ஓவியங்களுக்கான கவிதைகள்.

சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளான ஆங்கிலம், சீனம், மலாய் மற்றும் தமிழ் மொழிக் கவிதைகளைக் கவிதை ஆர்வலர்களுக்கிடையே அறிமுகம் செய்து சிங்கப்பூர்க் கவிதைகளை அடையாளப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இவ்வாண்டு சிங்கப்பூர்க் கவிதை விழா கவிதைசார் நிகழ்ச்சிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பத்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இவ்விழா ஜூலை 26 முதல் 28 வரை மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. பன்மொழிக் கவிஞர்களுடன் தொடர் கவிதை வாசிப்பு, புதிதாக வெளியீடு கண்ட நூல்கள் அறிமுகம், பிற மொழிக் கவிஞர்களின் நூல்கள் விற்பனை,…

மேலும் வாசிக்க

இன்பா கவிதைகள்

1) அந்த வளாகத்தைச் சுற்றி வளைத்துவிட்டார்கள் நேற்று முதன் முதலில் இடது பக்கச் சுவர்களை உடைத்தார்கள் பாதையோர மரக்கிளைகள் முறிந்து இலைகள், பூக்கள் நசுங்கின நீள்வட்ட சக்கர வாகனம் உருண்டு சென்றது மேற்கூரைகளை இடிக்க கடகட சத்தத்துடன் தூண்கள் சரிந்தன சிமிண்டுக் குவியல் தூசியைக் கிளப்பியது உடைத்து நொறுக்கிய சுண்ணாம்புச் சில்லுகளை வண்டியில் அள்ளிப்போட்டுச் சென்றார்கள் இன்று காலை இங்கு புதிதாக முளைத்திருக்கிறது புற்தரை இங்கு ஒரு கட்டடம் இருந்தது அது இருந்த இடமிருக்கிறது 2)…

மேலும் வாசிக்க

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]