Skip to content Skip to footer

இன்பா

நான் எழுதவே விரும்புகிறேன் – லி சிங் சாவ்

இணையத்தில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோது லி சிங்சோவ் (Li QingZhou) பற்றிய தகவல்களைப் படிக்க நேர்ந்தது. சமீபத்தில் தேசிய நூலகத்திற்குச் சென்றபோது எதார்த்தமாகக் கண்ணில் பட்ட பண்டைய சீனக் கவிஞரான லி சிங்சோவ் பற்றிய நூல் வாசிப்பதற்குச் சுவாரசியமாக இருக்க உடனே எடுத்துவந்தேன். கடந்த ஆயிரமாண்டுகளில் சீனாவின் சொங் வம்சத்தைச் சேர்ந்த முதல் பெண் கவிஞராக அறியப்படுகிறார்.  பண்டைய காலச் சீனாவில் டாங் வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, சீனா தொடர்ச்சியாக நடந்த போரினால் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளை…

மேலும் வாசிக்க

இன்பா கவிதைகள்

பல்லூழிக் காலப் பெரும் பூ என் அன்னை கிளம்பும் போது அவள் கைகளில் இருந்த பழம்பெரும் பூங்கொத்தை எனக்குக் கொடுத்துச் சென்றாள் நான் அதிலிருந்த பூ ஒன்றின் சிறு விதையை என் வீட்டுத் தொட்டியில் பதியமிட்டேன் மெல்ல கண் விழித்தது ஆயிரமாண்டு தாவரம். பின்பு ஒரு நாள் நான் கிளம்பும் முன்பு அதில் பறித்த மலர்கொண்டு ஒரு பூங்கொத்து தயாரித்து உன் கைகளுக்குத் தருவேன் அதைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் மகளே என் கோடி நூற்றாண்டுப் பூவே! என்…

மேலும் வாசிக்க

சிங்கப்பூர் எழுத்தாளர் விழா

நம் இயற்கையும் இயல்புகளும் என்ற கருப்பொருளில் சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2024 சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளான சீனம், மலாய், தமிழ் மற்றும் ஆங்கிலம் என நான்கு மொழிகளிலும் நவம்பர் 8 முதல் 17 வரை நடைபெற்று முடிந்தது. இந்த ஆண்டு எடுத்துக்கொள்ளப்பட்ட நாடு கொரியா மற்றும் கொரிய இலக்கியம் பற்றி பேசுவதற்கான முக்கியத்துவம் வழங்கப்பட்டது. கொரிய இலக்கியத்திற்கும் சிங்கப்பூரின் இலக்கியத்திற்குமான தொடர்பு குறித்த உரையாடல் நடைபெற்றது. இந்த உரையாடலில், சிங்கப்பூர், கொரியா மற்றும் புலம்பெயர்ந்தோர் இடையே உள்ள…

மேலும் வாசிக்க

சிங்கப்பூர்க் கவிதை விழாவில் சீன ஓவியங்களுக்கான கவிதைகள்.

சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளான ஆங்கிலம், சீனம், மலாய் மற்றும் தமிழ் மொழிக் கவிதைகளைக் கவிதை ஆர்வலர்களுக்கிடையே அறிமுகம் செய்து சிங்கப்பூர்க் கவிதைகளை அடையாளப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இவ்வாண்டு சிங்கப்பூர்க் கவிதை விழா கவிதைசார் நிகழ்ச்சிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பத்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இவ்விழா ஜூலை 26 முதல் 28 வரை மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. பன்மொழிக் கவிஞர்களுடன் தொடர் கவிதை வாசிப்பு, புதிதாக வெளியீடு கண்ட நூல்கள் அறிமுகம், பிற மொழிக் கவிஞர்களின் நூல்கள் விற்பனை,…

மேலும் வாசிக்க

இன்பா கவிதைகள்

1) அந்த வளாகத்தைச் சுற்றி வளைத்துவிட்டார்கள் நேற்று முதன் முதலில் இடது பக்கச் சுவர்களை உடைத்தார்கள் பாதையோர மரக்கிளைகள் முறிந்து இலைகள், பூக்கள் நசுங்கின நீள்வட்ட சக்கர வாகனம் உருண்டு சென்றது மேற்கூரைகளை இடிக்க கடகட சத்தத்துடன் தூண்கள் சரிந்தன சிமிண்டுக் குவியல் தூசியைக் கிளப்பியது உடைத்து நொறுக்கிய சுண்ணாம்புச் சில்லுகளை வண்டியில் அள்ளிப்போட்டுச் சென்றார்கள் இன்று காலை இங்கு புதிதாக முளைத்திருக்கிறது புற்தரை இங்கு ஒரு கட்டடம் இருந்தது அது இருந்த இடமிருக்கிறது 2)…

மேலும் வாசிக்க

வாவரக்காச்சி – லிபி ஆரண்யா

1. நீண்ட பலகாரத்தை முன்வைத்து ஓர் உரையாடல் அடர் காவி நிறத்தில் கச்சிதமாய்ப் பிடிக்கப்பட்டதொரு மோதி லட்டுதான் இன்றைய இந்தியா என்கிறாய் காலங்காலமாய்த் தட்டில் வைத்து நீட்டப்படும் ஒரு குத்து கலர் பூந்தியல்லவா இந்த தேசம்   2. பிராதும் மறுமொழியும் தீவிரங்களைச் சிதைக்கிறது என்பது தானே பகடி மீதான உன் விசனம் இரண்டு கேள்விகள் உன்னிடம் ஒரு பகடிக்கே நீர்த்துப் போகுமெனில் அது என்ன தீவிரம் தவிர ஒரு…

மேலும் வாசிக்க

சிந்து பூந்துறையில் பூத்த டெசர்ட் ரோஸ்

இகவடை பரவடை - குறுங்காவியம் - ஷங்கர் ராமசுப்ரமணியன்  -இன்பா //அவளுக்கு இதே சேயாற்றின் இன்னொரு கரையான சிந்து பூந்துறையில் சிதையூட்டி விடைகொடுத்தேன் அப்போது நதி காட்டியது எனக்குக் கருப்பு// ** //பானையைத் தோளில் தாங்கி அம்மாவைச் சுற்றும்போது ஒரு சுற்றுக்கு ஒரு துளை இட்டார்கள் பானை அழுது உகுத்தநீர் எனக்கு முதல் நீராகக் குளிர்ந்தது வனைந்தவை எல்லாம் போட்டு உடைக்கப்படுகிறது// ** //குச்சிகால்கள் கூம்பிச்…

மேலும் வாசிக்க

நிலவுப் படகிலேறி தேசம் தாண்டிய பொன்னி

கடல் நாகங்கள் பொன்னி - கவிதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரை அயலகக் கவிதைகளைப் பொறுத்தமட்டில் அதன் வாசிப்பு என்பது சன்னலுக்குள்ளிருந்து வெளியில் நடக்கும் சம்பவங்களை வேடிக்கைப் பார்ப்பது போல் தான் கவனிக்கப்படுகின்றன.  நானோ சன்னலுக்கு வெளியே நிகழும் சம்பவமாய் இருக்கிறேன்.   அப்படியானதொரு அடுக்குமாடியின் சன்னலை விட்டு கீழிறிங்கும்  நாகமொன்று  வளைந்து நெளிந்து இந்த  நகரத்துக்குள்  புகுந்து வெளியில் வருகிறது.  இந்த நாகம் மொழிக்குள் அதீத ஆர்வத்துடன் நுழைந்து ஓடினாலும் சில நேரங்களில் திக்கற்றுப்போயும்  திரிந்துகொண்டிருக்கிறது.  என் அகந்தையையும்…

மேலும் வாசிக்க

இன்பா கவிதைகள்

வீட்டுக்கு வந்த மணிச் செடி நேற்று மணிப்ளாண்ட் குறுந்தொட்டிச்செடியை வாங்கிவந்து வீட்டுக்குள் வைத்தேன் முனை சுருட்டிய தாள் போன்ற இலைகள் ஒவ்வொன்றாகத் தொட்டுப் பார்க்கின்றன விரல்கள் ஒரு போதும் மாறாத எப்போதும் மாற ஆசைப்பட்டு தொட்டியைக் குனிந்து பார்க்கின்றன நீர் தெளிக்கப்பட்ட இலைகள் மீயலையும் திணைகள் வெண்கிண்ணம் நிரம்பிய கருஞ்சிவப்புக் குளத்தில் குதித்துப் பின்னிப் பிணைந்து நெளிந்து வளைகின்றன மஞ்சள் நிற மண்புழுக்களாய் கடவுள் அதன்…

மேலும் வாசிக்க

கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் நேர்காணல்

நான் கவிஞன் என்றே விளிக்கப்பட விரும்புகிறேன் - கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் கேள்விகள் : இன்பா  நவீன இலக்கியத்தில் இயங்கியவாறு வரலாறு, தத்துவம் மற்றும் கோட்பாடுகள் கவிதையியல் குறித்த தீவிரமான தனது கருத்துகளை முன் வைத்துவருகின்ற படைப்பாளர் இளங்கோ கிருஷ்ணன். இவர் சென்னையில் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பின் நவீனத்துவம் சார்ந்து  கோட்பாட்டு ரீதியில் எளிய அறிமுகங்களைப் பகிர்ந்துவருகிறார்.   காய சண்டிகை, பட்சியன் சரிதம், பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும் ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் மருதம் மீட்போம்…

மேலும் வாசிக்க

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]