Skip to content Skip to footer

Tag: trending

அரவான்

ஒளியைக்கூட்டுங்கள் தலையை வெட்டுவதற்கான நேரம் வந்துவிட்டது என யாரோ கத்துகிறார்கள் நீ உன் நாடியை வெகுவாக உயர்த்தி என் பெயர் அரவான் என அறிவிக்கிறாய் முப்பத்திரண்டு அங்கலட்சணங்கள் கூடிய கிருஷ்ணனையும் அர்ஜுனனையும் சல்லியனையும் தவிர இவ்வுலகில் முழுமையான ஆண் நான் ஒருவனே நான் போர்ப்பலியாக மனமுவந்து சம்மதிக்கிறேன் ஒரே வெட்டில் தலை வேறு முண்டம் வேறு என்றாகவேண்டும் உயிர்த்திருக்கும் என் தலை மீதியுடலை முப்பத்தியோரு துண்டுகளாக வெட்டும் அதுவே ஈட்டி முனையில் குருட்சேத்திரப் போரை…

மேலும் வாசிக்க

ந. ஜயபாஸ்கரன் கவிதைகள்

மதுரையும் இவர் நடத்திய வெண்கலப் பாத்திரக் கடையும் தான் ந. ஜயபாஸ்கரன் கவிதைகளின் சிற்றண்டம். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலக் கவிதைகளில் தேர்ந்த பரிச்சயம் கொண்ட ஜயபாஸ்கரன், அர்த்தநாரி கவிதைத் தொகுதி வழியாக தமிழ் கவிதை வாசகர்களுக்கு அறிமுகமானவர். தமிழ் இலக்கிய, புராணங்களின் நினைவையும் எதிரொலிகளையும் மிகச் சிறிய எதிர்வினைகளையும் கொண்ட கவிதைகள் இவருடையது. எமிலி டிக்கன்ஸன், குருதத், திருப்பூவனத்து பொன்னனையாள், அங்கம் வெட்டுண்ட பாணன், ஆஹா சாகித் அலி என மேற்கும் கிழக்கும் முயங்கி நிறைவேறாமையின் வலியும்…

மேலும் வாசிக்க

தாமரை பாரதி கவிதைகள்

அகாலம் செத்தவன் கால்களை மடக்க மீண்டும் உயிர்த்தது போல அந்த கரப்பான் பூச்சி மல்லாந்தபடிக் கணுக்கால்களை அசைக்கிறது ஒவ்வொரு முறை கதவு திறக்கும் போதும் எங்கிருந்தோ முகம் காட்டிவிடுகிறது கழிவறை பீங்கான் வழவழப்பில் ஒலியேயின்றி நடக்கிறது சில நேரங்களில் நடப்பதும் சில நேரங்களில் ஓடுவதும் சிலநேரங்களில் மல்லாந்து படுத்துச் சிரிப்பதுமே வழக்கமாகிவிட்ட வேளையில் பறப்பதற்குச் சிறகிருந்தும் பறக்காமல் இங்கேயே சுற்றிச் சுற்றி அப்படி என்னதான் கண்டுவிட்டதோ இந்தக் கழிவறையில்? நானல்லாத நேரங்களில் என்னதான் செய்யுமோ துணையற்ற அது…

மேலும் வாசிக்க

மலைச்சாமி கவிதைகள்

நம்மை உய்விக்க வந்ததாக நம்பப்பட்ட மார்க்சிய கருத்தியலோடு, நம்பிக்கைகளும் தோற்று ஒரு நிரந்தர வெயிலுக்குள் மானுடம் பயணிக்கத் தொடங்கியதை வலுவாக அறிவித்த கவிக்குரல் மலைச்சாமி. வெங்கரிசல் என்று சொல்லப்படக்கூடிய ஒரு நிலப்பரப்பின் பிரத்யேக உள்ளடக்கத்தையும், உணர்வுகளையும் சேர்த்து உலகளாவிய தன்மையை நோக்கி எழுந்த குரல். 1994-ல் ‘ஒதுங்கிய தெருவிலும் சோடியம் விளக்கு’ கவிதைத் தொகுதிக்குப் பிறகு பெரிதாக எழுதவில்லை. அதே தொகுப்பிலுள்ள கவிதைகளுடன் கூடுதலாகச் சில கவிதைகளுடன் ‘விலக்கப்பட்ட திருடன்’ என்ற கவிதைத் தொகுதியாக உயிர்மை பதிப்பகம்…

மேலும் வாசிக்க

மாயத்தைக் கட்டும் கவிதை!

கவிஞர் விக்ரமாதித்யன் ஒருமுறை ’மாயத்தைக் கட்டுவதே கவிதை’ என்று ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார். எனக்கு அந்தச் சொற்கள் மனதுக்குள் உருண்டுகொண்டேயிருக்கின்றன. அதன் உள்ளார்ந்த பொருள் என்னவாய் இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். விக்ரமாதித்யன் சொன்ன சூழலலமைவைக் கடந்தும் அந்தச் சொற்கள் ஒரு தத்துவார்த்த தளத்துக்குள் பயணிக்கின்றன எனக் கருதுகிறேன். கவிதைகளில் மாயம் எப்படிக் கட்டப்படுகிறது. மாயம் என்பதைப் புரியாமை, பூடகத்தன்மை, சூட்சுமப் பொருள் என்றெல்லாம் பொருள்கொள்ளலாம். ஒரு கவிதையில் உள்ள சொற்களை எடுத்துக்கொண்டு, தனித் தனிச் சொல் சொல்லாய்…

மேலும் வாசிக்க

தமிழ்க் கவிதைக்குள் திணையென்னும் படிமம்

இந்தக் கேள்விகள் கவிதைகளை எழுதுபவர்களின் கேள்விகள் அல்ல. கவிதை வாசகர்களின் கேள்விகளும்கூட அல்ல. ஆனால் இலக்கியத்திறனாய்வு என்னும் விமரிசனம், “கவிதையை எப்படி வாசிப்பது?” என்ற கேள்வியில் தொடங்கி, “கவிதை எவ்வாறு உருவாகிறது?” என்பதை விளக்கிக் கொண்டே இருக்கின்றது. இப்படி விளக்குபவர்களை திறனாய்வாளர்கள் என்று சொல்வதைவிடவும், இலக்கியத்தை ஒரு கோட்பாடாக்கி விளக்கிவிட நினைப்பவர்கள் என்று சொல்லலாம். கவிதைகள் எவற்றை எழுதிக்காட்டுகின்றன? இந்தக் கேள்விக்குத் தவிப்பை - தேடலை - தேடலின் வலியை- தடையை - தடைகள் ஏற்படுத்தும் அச்சத்தை-…

மேலும் வாசிக்க

சிங்கப்பூர் கவிதைவெளியின் புதிய பாய்ச்சல்

சென்ற மே 21-ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடைபெற்ற இன்பாவின் ‘லயாங் லயாங் குருவிகளின் கீச்சொலிகள்’ கவிதைநூல் வெளியீடு மற்றும் திணைகள் இணைய இதழ் தொடக்க விழாவில் கவிஞர் பெருந்தேவி முன்வைத்த ஒரு கருத்தாடல் கவனம் பெற்றது. சிங்கப்பூர் தமிழ் படைப்பாளர்கள் தங்களது படைப்புகளுக்கான அங்கீகாரத்துக்கு தமிழக இலக்கியங்களை ஒப்புநோக்கும் மனப்போக்கிலிருந்து வெளிவரவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். இது மிகச்சரியானதொரு பார்வை என்றே கருதலாம். போலச்செய்யும் போக்கு இலக்கிய படைப்புக்களின் தனித்துவத்திற்கு உலைவைக்கும் போக்கு. உலகெங்கிலும்…

மேலும் வாசிக்க

நிழல், அம்மா.

புதிய கவிதை  நூல் நிழல், அம்மா பற்றி... நேசத்தின் கிடைமட்டப் பரப்பில் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் கடந்த நான்காண்டுகளில் எழுதப்பட்டவை. ஒட்டுமொத்தமாகப் படிக்கும்போது எனது கவிதை வெளியீடு இரண்டு விதமாக இதில் வெளிப்பட்டிருக்கின்றன என்று தோன்றுகிறது. உள்ளடக்கமும் மொழியும் சார்ந்து அவற்றை குழப்பமும் மூட்டமும் தகிப்பும் புனைவும் கொண்ட கவிதைகள் என்றும், தெளிவும், அறிந்த ஒன்றைச் சுட்டும் நம்பிக்கையும் தென்படும் கவிதைகள் என்றும் வகை பிரிக்கலாம். முதல் வகைக் கவிதைகள் ஓசை ஒழுங்கும் சந்தமும் கொண்டதாகவும், இரண்டாம் வகைக்…

மேலும் வாசிக்க

அருண் குமார் சாஹூ கவிதை

சாலை சேற்றுச் சாலைகள், தார்ச் சாலைகள், கிராமச் சாலைகள், நகரச் சாலைகள், நெல்வயல்களின் குறுக்கே சாலைகள், விளையாட்டு மைதானத்திற்குச் செல்லும் சாலைகள், சந்துகள், தெருக்கள், நெடுஞ்சாலைகள், அதிவேக நெடுஞ்சாலைகள், சில நேராக, சில பாம்புபோல; சில வெறிச்சோடி, சில நெரிசலாக; இருளுக்குப் போகும் சாலைகள் மற்றும் வெளிச்சத்திற்குப் போகும் சாலைகள்; கிராமங்களிலிருந்து நகரங்களுக்குப் போகும் சாலைகள். சில பழைய, பழமையான சாலைகள்; சில புதிய, புத்தம் புதிய சாலைகள்; சில பாதசாரிகளுக்கு, சில சொகுசுவாகனங்களுக்கு; சில குதிரை…

மேலும் வாசிக்க

நான்யா சுதிர் கவிதை

நான் எப்படித் துவங்குவது? நான் உனக்கு என்ன சொல்வது ஒரு கடலோரத்திலிருந்து மற்றொன்றுக்கு எதுவும் இல்லாமல் யாரும் இல்லாமல் என் எண்ணங்கள் மட்டுமே இருந்த இந்த நீண்ட பயணங்கள் பற்றி. நான் ஒரு பாடல் எழுத வேண்டும் என்றால் நான் உன்னிலிருந்து, என்னை எவ்வளவு சக்தியுடன் நீ நிரப்புகிறாய் என்பதிலிருந்து துவங்குவேன். நீ என்னைப் பார்த்த, என்னுடன் எதையாவது துவங்க நீ முடிவு செய்த, அந்த நாளிலிருந்து…

மேலும் வாசிக்க

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]