கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ எனக்கு நேரடியாக அறிமுகமாகும் முன்னர் அவரைப் புனைவு வழியேதான் கண்டடைந்தேன். நேரடியாகப் பார்த்து நட்பு பாராட்டுவதற்கான அடிநாதமாய் இருப்பது ஒருவரின் படைப்புதானே. ஒருவரின் படைப்புகள்தானே அவரை அணுகவைக்கிறது. ஆனால் அவரின் நட்பைவிட அழுத்தமாய்த் தன்னை முன்னிறுத்திக்கொள்வது படைப்பு நயம்தான். “வெளிச்ச தேவதை’ சிறு காவியத்தைச் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் , கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் கூடுகையின் போது என் கையில் கொடுத்தார் பிச்சினிக்காடு இளங்கோ. கொடுக்கும்போது…
தாங்கள் வாழும் திணைகள், அதன் அரசியலை, வாழ்வியலை வரலாற்றில் இடம் பெறச் செய்பவர்களில் படைப்பாளர்களே முதலிடம் வகிக்கிறார்கள். அவர்கள் புனையும் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் ஊடாகவும் அபுனைவு ஊடாகவும் தங்கள் சமகால வாழ்வியல் சிக்கல்களையும் அதற்குள் கொண்டுவந்து விடுகிறார்கள். எனவே படைப்பாளர்கள் வழியேதான் சமகாலத்தில் வாழ்ந்த மக்களின் சமூக அரசியலை அதன் பண்பாட்டைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதற்குச் சங்ககாலக் கவிதைகளையே முன்னோடியாக எடுத்துக்கொள்ளலாம். அதன் வழி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரான மாநுட நாகரிகத்தை படைப்பின் வழியே நாம்…