Skip to content Skip to sidebar Skip to footer

Blog Standard

சரவணன் மாணிக்கவாசகம் – நூல் அறிமுகம்

தப்பரும்பு - ப்ரிம்யா கிராஸ்வின் தமிழ்க்கவிதைகளில் புரிதல் எவ்வளவுக்கு எவ்வளவு வாசகர்களுக்குக் குறைகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு சிறந்த கவிஞர் என்று யார் முதலில் சொன்னார்கள் தெரியவில்லை.  எளிமை என்பது வேறு, அழகியல் என்பது வேறு, நுட்பம் என்பது வேறு.  ஒன்றுக்கொன்று தொடர்பில்லை. நூலின் முதல் கவிதையே அட சொல்ல வைக்கிறது.  பருந்து - வாழ்க்கை, பறத்தல்- பாடம், குஞ்சு-  வானத்தில் சிறகடிக்கத் தெரியாது தத்தளிக்கப் போகிறது. குஞ்சுகள் எப்படியும் காயமின்றி பறத்தலையா கற்றுக் கொள்ளும், நாம் தான் காயப்பட்டு, தழும்பை வருடிக்கொண்டே காலத்தைக் கழிப்பது. "…

மேலும் வாசிக்க

சித்துராஜ் பொன்ராஜ் கவிதைகள்

விரைவில் வெளியாகவிருக்கும் ‘தலையில் பிறைசூடிய பெண்கள்’  கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்) 1 வார்த்தைகளை மலர்த்தண்டுகளாய் வழவழப்பாக்கத் தெரிந்தவர்களுக்குத்தான் இந்தச் சாகசம் கைவரும் - ஒரு கொத்து வார்த்தைகளை அடியில் சிவப்பு நிற ரிப்பன் கட்டியும் நீர்க்கோலங்களாய் ஒரு தாளைச் சுற்றியும் நீட்டுவது, என்னவோ சுலபம்தான். மலர்த்தண்டுகளை மேலிருந்து கீழாய் குறுக்க வெட்டியதால் ஏற்பட்ட தழும்பின் சொரசொரப்பு இன்னமும் கைகளில் ஒட்டிக் கொண்டிருப்பதால் கேட்கிறேன்: தவறாகப் போனது வெட்கத்தில் தலைகுனிய ஆரம்பித்திருக்கும் தண்டா, ஒரு துண்டுச் சதைபோன்ற…

மேலும் வாசிக்க

வேல்கண்ணன் கவிதைகள்

காலாவதியான கடவுச்சொல் சமீபத்தில் பிரிந்த  காதலியின் பிறந்தநாளை  கடப்பது குறித்து நள்ளிரவு கவிஞனின் கையேடுகள்  ஏதேனும் கிடைக்கிறதா? அடுத்த வருடத்திற்குள் நேற்றிலிருந்து நாளைக்குத் தாவுவதற்கு  மந்திரம் கற்க வேண்டும். வலியோடு முறியும் மின்னலை இணைக்க வழியேதும் உண்டாவன  பிரான்சிஸ் கிருபாவிடம் கேட்டிருக்க வேண்டும் தனித்துக் கிடப்பது குறித்தெல்லாம் ஏகப்பட்ட குறிப்புகள் பெருகிக் கிடக்கின்றன. முதல் கலவியின் பின்னணியில் ஒலித்த  பாடல் கேட்க நேரும்  தருணங்களைக்  கடக்க உதவும் கடவுச்சொல் காலாவதியானதொரு நாளில் கிடைக்கிறது. வளரும் புத்தர் வரவேற்பறையில் கையளவு  சட்டகத்தில் இமைகள் மூடி புன்னகைக் குமிழ ஒளி…

மேலும் வாசிக்க

இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள்

விடம்பனக் களிறு   மூங்கிற் புல்லை பாங்குற தறித்து வாங்கிய பரணில் தினைபுனம் காக்கும் சேனோன் வானுற விளைந்த காட்டுயானமும் கருவுப்பரிசியும் சிதையக் குலைக்கும் களிறுகளை சிதைத்த கதை இது இதை நான் உங்களுக்குச் சொல்வேன் என்றான் சூதன்   (வேறு) பெரும் பசிகொண்ட மதயானை ஒன்று ஆரண்யத்தில் நுழைந்தது தன் வசந்தத்தில் தழைத்திராத முதிரா வனம் தத்தளித்தது அவன் கபிலன் மண்ணின் வண்ணத்தையும் மண்ணுண்டு திரண்ட மரத்தின் இளந்தளிர் வண்ணத்தையும் மேனியில் கொண்டவன் நிழலாய்…

மேலும் வாசிக்க

மேரி ஆலிவர் – மொழிபெயர்ப்புக் கவிதைகள்

1.மரங்களைப் பற்றிய கனவு என்னுள் உள்ள ஒன்று மரங்களைப் பற்றிக் கனவு காண்கிறது. அமைதியான வீடு, கொஞ்சம் பசுமை, ஓரளவு இடம் தொல்லைப்படுத்தும் நகரத்தின் சலம்பல்களிலிருந்து கொஞ்சம் தள்ளி.. தொழிற்சாலைகளிலிருந்தும் பள்ளிகளிலிருந்தும் புலம்பல்களிலிருந்தும் சற்றே விலகி.. எனது வாழ்விலிருந்து சில கட்டற்ற சரணங்களையாவது உருவாக்குவதற்கு ஓடைகள் மற்றும் பறவைகளின் துணையுடன் மட்டுமே செலவிடுவதற்கு எனக்கு நேரம் கிடைக்குமென்று நினைக்கிறேன். எங்குமிருந்தும் சற்று தள்ளிய அந்த இடத்தில் அப்போது என்னிடம் வரவேண்டும் அது, அதுதான் மரணம், என்னுள் உள்ள…

மேலும் வாசிக்க

தருணம்

சொல்லால் முகிழ்க்கும் பித்து உனக்கும் எனக்கும் இடையில் கண்ணே எந்தத் தருணத்தில் எப்படி நிகழும் அது மார்க்கமில்லாதது அபாதா அது வரம்பில்லாதது அனந்தகோரா அது நிறமில்லாதது தயாபரா யாருடையது இந்த எதிர்க்குரல் எங்கிருந்து வருகிறது அது என்னைச் சுற்றி எல்லாம் ஆவியாகிக்கொண்டிருக்கிறது என் பகற்கனவுகள் என் கற்பனைகள் என்னுள் பிளவுபட்ட ஆளுமைகள் என் உறவுகள் என் நட்புகள் எல்லாம் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன நான் அவளையே நம்பியிருக்கிறேன் நான் அவளை நோக்கி எழுப்பும் கேள்விகளுக்கு நீ இடைமறித்து இறைவனை…

மேலும் வாசிக்க

சாகசப் பிழை

அது ஒரு குளிர்ந்த இரவின் சாகசப் பிழை கலைத்துவிடலாமென்கிறான் நீ ஜன்னலுக்கு வெளியே பார்க்கிறாய் தெருவில் மழைநீர் சிறு குட்டைகளாகத் தேங்கிக்கிடக்க, இரு நாய்கள் ஓடுகின்றன எங்கே ஒடுகின்றன அவை? நீ இருக்கும் உணவகத்தின் அறைக்குள்ளே பளபளக்கும் அலுமினிய புகைபோக்கிக்குக் கீழே அடுப்பில் உரித்த கோழியை வெட்டுகிறான் வெள்ளைத் தொப்பி அணிந்த சமையற்காரன் கண்ணாடி அறைக்குள் எல்லோரும் பார்க்கும்படி நிற்கிறான்  நீ சாக்லேட் மடக்கிய தாளில் என்ன பொன்மொழி எழுதியிருக்கிறது என வாசிக்கிறாய் “பிரபஞ்சம் முழுவதும் யாவும்…

மேலும் வாசிக்க

தாகம்

இப்போதெல்லாம் எவ்வளவு தாகமாய் இருக்கிறது தெய்வீகக்காதல் கதையொன்றைக் கேட்பதற்கு ஆனாலும் இரவின் நிறம் அடரும் சுவர்களுக்குக்கூட உன்னையும் என்னையும் பற்றி நான் ஏன் சொல்லக் கூசுகிறேன் ஒரு இரகசியம் நழுவி நோக்கமற்ற குமிழியாய் உடைந்து வர்ணஜாலமிழக்கும் நீர்த்திவலைகளாவதை நான் விரும்பவில்லை என்றே தோன்றுகிறது உன் கூந்தலின் வருடலில் என் மார்க்காம்புகள் சிலிர்த்ததை யாருக்கு நான் சொல்ல வேண்டும் யாருக்கு நான் சொல்லமுடியும் நள்ளிரவில் வரும் உன்  தொலைபேசி அழைப்புகள் கூட நம்முடைய உன்மத்த கூடலையே ஒத்திருக்கின்றன சொற்களால்…

மேலும் வாசிக்க

ஊஞ்சல் மண்டபம்

ஆயிரமாயிரமானோர் கூடிக் கலையும் ஊஞ்சல் மண்டபத்தில் சமநிலை எங்கேயிருக்கிறது ஆயிரமாயிரமான கதாபாத்திரங்கள் கதைகளாகும் யாளித் தூண்களின் நடுவே சம நோக்கு எங்கேயிருக்கிறது யாரை நோக்கி இந்தக் கேள்விகளைக் கேட்பேன் நான் யாரிடமிருக்கிறது சமநிலைக்கான அக்கறைகள் என் கன்னக்கதுப்புகளில் துறவறத்தின் ரேகைகள் தோன்றிவிட்டனவா நீ அடையாளம் கண்டுவிட்டாயா நான் எப்போதுமே மண்டபத்துக்கு வெளியில் நிற்பவன்தானே இறைவனின் கல்யாண கோலமும் கூட்ட நெரிசலும் கலைய எப்போதும் காத்திருப்பவன் நான் முதலில் வருபவன் என்றாலும் கடைசியில் தாமதமாய்ச் சென்றடைபவன் எல்லாவற்றிலும் தாமதம்…

மேலும் வாசிக்க

தூசு

எங்கும் வியாபித்திருக்கும் தூசு நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களில் படிந்திருக்கும்போது அதில் நீ உன் ஆட்காட்டி விரலால் உன் காதலியின் பெயரை எழுதுகிறாய் தூசில் தொடங்கி தூசில் முடியுமென்ற விவிலிய வாசகத்தில் தூசில் எல்லாம் முடிவதை நீ அறிவாய் ஆனால் தூசில் எது எப்படித் தொடங்கியது என்பதை எவ்வாறு நீ அறிவாய் எங்கோ ஒரு இடத்தில் மேகம் வடிகட்டிய ஒற்றைக் கிரணத்தில் ஒளித்தூசுக் கற்றையுனுள் ஆங்காங்கேயுள்ள வெற்றிடத்தில் அவள் உன் பெயரை எழுதி எல்லாவற்றையும் ஆரம்பித்திருக்கக்கூடும் இல்லை நிறைமதியின்…

மேலும் வாசிக்க

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]