சரஸ்வதி நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் உரசுகின்றன ஒரு நதி மின்னலென நெளிகிறது உன் நாதம் ஒரு கவிதையாகிறது. # பெரும் கலவரம் நடந்த குளம் ரத்த சிவப்பு கரையில் இருக்கிறது வீணை கரையில் இருக்கிறது கரை கரையில் இருக்கிறது குளம் எங்கே போனது மரம் எங்கே போனது யானை எங்கே போனது செருப்புகள் மிதந்துகொண்டிருக்கின்றன கட்டைகள் துணிகள் மிதக்கின்றன ஆழத்தில் கிடக்கிறது ரத்தக்கறை நீங்காத அரிவாள் அதனை நீர் மீட்டுகிறது வெள்ளைத்தாமரை செஞ்சிவப்பு ஆகிறது #…
ஊமத்தையும் மருத்தோன்றியும் அருகருகில் ஒன்றை அரைத்தால் உன் கந்தகமௌனம் மற்றது உனது முத்தத்துக்கு முந்தையச் சொல் உறிஞ்சப்படும் கஞ்சா கங்கின் செந்திறப்பு கொதிக்கும் ஓரிதழ் தாமரையின் திரட்சி முன்னது வெட்கினேன் என்று பிறகு சொல்லும் கணம் பின்னது உனக்கு கடவுச்சொல் மறந்த கண்ணாடி அறை அழுக்கை முத்தாக்கும் சிப்பியை ருசித்துண்ணும் கடல் நிலத்தவனுக்கும் சிறிய சினச் சொல்லண்ண உதிரவாசனைக்கு நீர்த்திமிரும் சுறாவுக்கும் ஆன பனிப்போரில் கஞ்சா கங்ககென வால்நட்சத்திரம் எறிந்து விளையாடுகிறது…
சுழற்சி அநேக பொழுதுகளில் தூங்கி தூங்கி வழிகிறாள் அம்மா தூக்கத்தில் புன்னகைப்பதாக ஒருமுறை அடுத்தவீட்டு அக்கா சொன்னாள் கழிவறையில் தண்ணீரைத் திறந்து மூடாமல் அப்படியே பார்த்துகொண்டே நிற்கிறாள் உடையை பத்து முறையாவது மாற்றச் சொல்லி தினமும் அடம்பிடிக்கிறாள் காலையா? மாலையா? தெரியாமல் குழம்புகிறாள் ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்கிறாள் சாப்பிட்டு முடித்து சித்த நேரத்தில் சாப்பாடு போடச் சொல்கிறாள் முணுமுணுத்தபடி கடவுளிடம் ஏதாவது வேண்டிக் கொண்டே இருக்கிறாள் வீட்டில் காணாமல் போகும் பல அவளது…
வீட்டுக்கு வந்த மணிச் செடி நேற்று மணிப்ளாண்ட் குறுந்தொட்டிச்செடியை வாங்கிவந்து வீட்டுக்குள் வைத்தேன் முனை சுருட்டிய தாள் போன்ற இலைகள் ஒவ்வொன்றாகத் தொட்டுப் பார்க்கின்றன விரல்கள் ஒரு போதும் மாறாத எப்போதும் மாற ஆசைப்பட்டு தொட்டியைக் குனிந்து பார்க்கின்றன நீர் தெளிக்கப்பட்ட இலைகள் மீயலையும் திணைகள் வெண்கிண்ணம் நிரம்பிய கருஞ்சிவப்புக் குளத்தில் குதித்துப் பின்னிப் பிணைந்து நெளிந்து வளைகின்றன மஞ்சள் நிற மண்புழுக்களாய் கடவுள் அதன்…
நேர்காணல் செய்தவர் : நதன் கார்டல்ஸ் இருபதாம் நூற்றாண்டின் மகத்தான கவிஞர்களில் ஒருவர் செஸ்லோ மிலோஸ். நோபல் பரிசு பெற்றவர். தீவிரமான மோதல்கள் கொண்ட உலகத்தில் வாழ விதிக்கப்பட்ட மனிதனின் குரல் என்று நோபல் பரிசுக் கமிட்டியின் குறிப்பு இவரது கவிதைகளைப் பற்றித் தெரிவிக்கிறது. மனம்நிறை கவனம்தான் இவரது சமயத்துவம் என்பதை இந்த நேர்காணல் மூலம் தெரியப்படுத்துகிறார். கேள்வி: உங்கள் கவிதைத் தொகுப்பில் கதேயின் மேற்கோள் ஒன்றைத் தந்திருக்கிறீர்கள். “நலிவின் காலகட்டங்களில், எல்லா மனப்போக்குகளும்…