Skip to content Skip to footer

Tag: இதழ் 1

இலங்கைப் பெண்களின் கவிதைகள்

இலங்கைப் பெண்களின் கவிதைகள் என்றால் அதில் தனியே தமிழ்க் கவிதைகளை மட்டும் கொள்ள முடியாது. சிங்களக் கவிதைளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் எடுத்துப் பேசும்போதுதான் இலங்கைப் பெண்களின் கவிதைகளைப் பற்றிய சித்திரம் கிடைக்கும். இரண்டு மொழிச் சூழல்களிலும் உள்ள சமூக, அரசியல், பண்பாட்டு நிலைமைகள் புலப்படும். இரண்டிலும் நிறைய வேறுபாட்டம்சங்கள் உண்டு. ஏன் தமிழில் கூட நிறைய வேறுபடுதல்கள் உள்ளன. முஸ்லிம் பெண்களின் கவிதைகள் வேறொன்றாகத் தனித்து நிற்கும். அதைப்போல மலையகப் பெண் கவிதைகள் இன்னொரு…

மேலும் வாசிக்க

ஸ்ரீநேசன் ஆட்டும் ஊஞ்சல்

ஒரு நூற்றாண்டைக் காணப்போகும் புதுக்கவிதை, நவீன கவிதை வடிவத்தில் குறிப்பிட்ட சாதனையை நிகழ்த்திய கலைஞர்களின் படைப்புகளை என்னளவில் தொகுத்துக் கொள்ளும்போது அவர்களது மரபையும் சேர்த்துத் தொகுத்துக் கொள்வது அத்தியாவசியமான பணியாகவே தோன்றுகிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, தனித்துவத்தையும், அலாதிக் குணத்தையும் தக்க வைத்திருக்கும் ஸ்ரீநேசனின் மூன்று கவிதைத் தொகுப்புகளையும் சேர்த்து வாசிக்கும்போது என்ன மரபில் அவர் கிளைத்திருக்கிறார் என்று மெல்லிசாகத் தெரிய வருகிறது. நகுலன், ஆனந்த், ஆத்மாநாம், ஞானக்கூத்தன், அபி ஆகியோர் உருவாக்கிய சாரமான ஒரு கவிதை…

மேலும் வாசிக்க

மணமாய்க் கரைகிறேன்

உங்களுக்காக நான் உங்களுக்காக கரைகிறேன் முற்றும் முழுதும் உங்களுக்கே என்னைப்போல் உங்களுக்காய் யாருமில்லை என்னையும் நீங்கள் விட்டுக்கொடுத்ததில்லை உங்கள் பெற்றோரும்  உடன் பிறந்தோரும்கூட என்னைப்போல் கரைந்ததில்லை உங்களுக்காக கரைவதற்காகவே நான் ஒவ்வொரு நாளும் கரைவதற்குக் காத்திருப்பதும் நான்தான் என்ன? இப்பொழுதாவது கரைகிறதா உங்கள் மனம்?

மேலும் வாசிக்க

முதல் பாடல் 2

தொஷ்டா! நீ அழைத்தால் என்னால் வராமல் இருக்க முடியாது என் கண்களைக் குருடாக்கிக்கொள்கிறேன் காதுகளை பழுக்கக் காய்ச்சிய கம்பிகளால் செவிடாக்கிக்கொள்கிறேன் என் இதயத்தைப் பிய்த்து நாய்களுக்கு வீசுகிறேன் அப்போதும் உன் குரல் எனக்குக் கேட்கிறது உன் உருவம் எனை அழைக்கிறது உன் காதல் எனைத் தொடுகிறது மலைகளில் திரளும் வெள்ளம் பள்ளத்தாக்குகளில் பாய்வது போல் விண்ணுக்கு எரியப்பட்ட கல் பூமிக்கு இழுக்கப்படுவது போல் நான் உன்னால் அழைக்கப்படுகிறேன் கதியற்று வருகிறேன் மீண்டும் மீண்டும்

மேலும் வாசிக்க

அழைப்பு

பொது யுகம் 2536 அந்த மூத்த எழுத்தாளர் நேர்காணலில் அமர்ந்திருக்கிறார் கடந்த காலத்திலிருந்து யாரையாவது திரும்ப அழைக்க நேர்ந்தால் யாரை அழைப்பீர்கள் அவர் சற்றும் யோசிக்காமல் சொல்கிறார் 1996ல் இறந்து போன என் மனைவி ஒரு கணம் நிசப்தம் மறுகணம் அவர் மனைவி தோன்றுகிறார் இது எப்படி சாத்தியம் அன்பே எழுத்தாளர் தழுதழுக்கிறார் உன்னால்தான் அன்பே இருவரும் தழுவுகிறார்கள் கொட்டும் மழையில் வானில் நீந்திச் செல்கின்றன இரு தங்கமீன்கள் ஒன்றை ஒன்று…

மேலும் வாசிக்க

கவியாலானது

யானையைக் குழி தோண்டி பிடிப்பது போல் கவிஞனைக் காதல் பிடிக்கிறது பரவசத்தின் சொற்கள் விம்முகின்றன அவனின் ஒளிகொண்ட சொற்களை வானில் எறிகிறது அவை விண்மீன்களாகின்றன இருண்ட சொற்களை பகல் காகங்களாக்குகிறது காதலின் அபோதத்தில் கவிஞன் பித்தாகிறான் அவன் அழுதபோது ஒரு யுகத்தின் புன்னகை கோணுகிறது அவன் சிரித்த போது யாருமற்ற வனங்களில் பூக்கள் கண்ணெடுக்கின்றன யாருமில்லை என சுருள்கிறான் நடுங்குகிறது வானம் அவனின் யானைப் பசியால்தான் தமக்குள் மோகிக்கின்றன உயிர்கள் நுரைத்து நொதிக்கும்…

மேலும் வாசிக்க

கானல் வரி

அவனை நான் மூன்று முறை பார்த்திருக்கிறேன் உலகத் திரைப்பட விழாவில் உன் அலுவலகத்தில் உன் படுக்கையில் என் கற்பனையில் அன்பே அது கற்பனை என்றே நம்ப விரும்பினேன். ஒரு நோயை நம்ப விரும்பாத அதைரியக்காரன் போல, இதுவெல்லாம் வெறும் கனவென்று எழ விரும்புபவன் போல ஹார்ட்டின்களில் என்ன இருக்கின்றன; முத்த ஸ்மைலிகளில் என்ன இருக்கின்றன என்று நினைத்தேன். அது அவ்வளவு சோபையான நம்பிக்கை இல்லை என்றாலும், அதுவே போதுமாய் இருந்தது. நீ அதை…

மேலும் வாசிக்க

சிவை

நேரசைக்கு 64 எழுத்துகள் நிரையசைக்கு 68 எழுத்துகள் அதுவே கட்டளைக் கலித்துறை என்கிறாள் காரைக்கால் அம்மை நானோ நிகோனர் பர்ராவின் ரோலர் கோஸ்டர்களை கவிதைக்குள் ஓட்ட முயல்பவன் தலை கீழாய் நடந்து உன் பதம் அடைவது என் இயல்பல்ல சிவையே

மேலும் வாசிக்க

வேறு வழி?

Bynge Appஇல் ராஜேஷ் குமாரை பதினைந்து லட்சம் பேர் படிக்கிறார்கள் என்றார் ஒரு நண்பர் ஐரோப்பாவில் சார்லஸ் ப்யூகோவ்ஸ்கியை பத்து மில்லியன் பேர் படிக்கிறார்கள் என்றேன் நான் ஒரு வேண்டாத திகைப்பின் வாயை மூடுவதற்கு அடுத்த கண்டத்திலிருந்து கையைக் கொண்டுவர வேண்டியிருக்கிறது

மேலும் வாசிக்க

அதற்குள் மற்றொரு திரிபுற்ற வைரஸ் வந்துவிட்டது

நேற்றுத்தான் ஒன்று வந்தது போலிருந்தது அதற்குள் முகத்தை மாற்றிக்கொண்டுவிட்டது ஒரு திரிபுருவுக்கும் இன்னொன்றுக்குமிடையே காலம் குறையக் குறைய எனக்கும் உனக்குமிடையே தூரம் அதிகமாகி மேலதிகமாகிறது இப்போதெல்லாம் உன் முகபாவனைகள் மாறிவிடவில்லையே பேசும்போது இப்போதும் உன் வலது புருவத்தை உயர்த்துகிறாயா உன் விரலசைவில் இப்போதும் சிறு குருவிகள் உன் நாற்காலியின் கைப்பிடியில் வந்தமர்கின்றனவா நான் ஒப்பனை செய்துகொண்டு பல மாலைகளாகிவிட்டன களைப்புற்றிருக்கிறேன் ஒரு நினைவிலிருந்து இன்னொரு நினைவுக்குக் கூட இப்போதெல்லாம் ஊர்ந்து செல்கிறேன்…

மேலும் வாசிக்க

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]