சலோமியின் மீன் பருவக் கண்கள்
1 யேசுவின் மூன்று சீடத்திகளில் ஒருவள் சலோமி. யேசு உயிர்த்துவிட்ட பிற்பாடும் ‘கல்லறையில் யேசுவைக் காணவில்லையே’ எனக் கலங்கிய மூவருள் ஒருவள் சலோமி.
இல்லையில்லை யேசுவின் காதலிகளில் ஒருத்தியே சலோமி.
அவையெல்லாம் கிடையாது, சலோமி என்பவள் யேசுவின் பன்னிரு சீடர்களில் இருவருக்கு அம்மா.
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை யேசுவின் தாய் அருள்நிறைக் கன்னி மரிக்கு நேரிளையத் தங்கையவள். ஆக, அவள் யேசுவுக்கு அருள்நிறைச் சித்தி.
இவையெதுவும் உண்மையல்ல கன்னி மரிக்குப் பிரசவத் தொண்டுசெய்த…
பல்லூழிக் காலப் பெரும் பூ என் அன்னை கிளம்பும் போது அவள் கைகளில் இருந்த பழம்பெரும் பூங்கொத்தை எனக்குக் கொடுத்துச் சென்றாள் நான் அதிலிருந்த பூ ஒன்றின் சிறு விதையை என் வீட்டுத் தொட்டியில் பதியமிட்டேன் மெல்ல கண் விழித்தது ஆயிரமாண்டு தாவரம். பின்பு ஒரு நாள் நான் கிளம்பும் முன்பு அதில் பறித்த மலர்கொண்டு ஒரு பூங்கொத்து தயாரித்து உன் கைகளுக்குத் தருவேன் அதைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் மகளே என் கோடி நூற்றாண்டுப் பூவே! என்…
திணைகள் கவிதை விருதுக்கு நவீன கவிதை நூல்கள் வரவேற்கப்படுகின்றன
இந்த முறை 2023 மற்றும் 2024ஆம் ஆண்டில் வெளிவந்த நூல்களுக்கும் சேர்த்து ஒரே விருதாக வழங்கப்படுகிறது. இந்த இணைப்பில் தங்களது விவரங்களைப் பதிவு செய்துவிட்டு நூல்களை அனுப்பவும். https://tinyurl.com/jewrkz3n
நூல்களை 10 மார்ச் 2025 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டிய முகவரி: Old No.72, New No.3 Kumaran Road II, Main Road, Chinmaya Nagar, Chennai 600 092 விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட…
1.
ஒரு நதிக்குள் நிறைய நதிகள் இருக்கின்றன அதில் ஒன்று ஒரு மூலையில் கூழாங்கற்களை ரகசியமாய் சேகரித்துக்கொண்டிருக்கிறது
ஒன்று கரையை எட்டியெட்டிப் பார்க்கிறது ஒன்று பாறையில் ஏறி வழுக்கி விழுகிறது
சிலதுகள் அமைதி சிலதுகள் சேட்டை
ஒன்றிற்கு நீச்சல் தெரியவில்லை ஒன்றிற்குப் பாடத் தெரிகிறது ஒன்றை ஒன்று முந்துகிறது ஒன்றை ஒன்று பிடித்து இழுக்கிறது
குழந்தைகள் கூட்டமாகச் சென்றாலும் குழப்பமாக இல்லை
கூட்டமாகச் செல்லும் நதிகளைத்தான் நாம் நதி என்கிறோம்
2.
மழை பெய்துகொண்டிருந்த ஊரிலிருந்து மழை…
நம் இயற்கையும் இயல்புகளும் என்ற கருப்பொருளில் சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2024 சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளான சீனம், மலாய், தமிழ் மற்றும் ஆங்கிலம் என நான்கு மொழிகளிலும் நவம்பர் 8 முதல் 17 வரை நடைபெற்று முடிந்தது. இந்த ஆண்டு எடுத்துக்கொள்ளப்பட்ட நாடு கொரியா மற்றும் கொரிய இலக்கியம் பற்றி பேசுவதற்கான முக்கியத்துவம் வழங்கப்பட்டது. கொரிய இலக்கியத்திற்கும் சிங்கப்பூரின் இலக்கியத்திற்குமான தொடர்பு குறித்த உரையாடல் நடைபெற்றது. இந்த உரையாடலில், சிங்கப்பூர், கொரியா மற்றும் புலம்பெயர்ந்தோர் இடையே உள்ள…
வருவதற்கு இன்னும் ஒரு வருடம் ஆகலாம்
உனக்கும் எனக்குமிடையில் நீளும் இச்சுவர்களில் உப்பின் ஈரம் பூத்திருக்கின்றது உனக்கு எத்தனை முறை சொல்வது.!? உன் மனம் மயில் அகவுவதைப்போல ஒலியெழுப்பிக்கொண்டிருக்கிறது நீயோ குனிந்த தலை நிமிராது கூடை முடைந்து கொண்டிருக்கின்றாய் பூவை தீபத்தில் அழுத்தி ஒளியின் மூச்சை நிறுத்தி வைத்துவிட்டு சிறிது கண்ணடை தூதுக்கு இவ்விடம் பறவையேதுமற்று இருக்கின்றது வௌவால்களின் வழியே அனுப்பியிருக்கிறேன். வழியில் கனியைக் கண்டு அவையும் தலைகீழ் பற்றாற்றலாம் விடியும்முன் வந்தடையும் அந்தப்பாலூட்டிகளின் மார்பில் முட்டி…
கவிஞனின் கண்களுக்கு மட்டும் ஒரு காட்சி வேறொரு பரிமாணமாகத் தன்னைக் காட்டிக்கொள்கிறது. இந்தப் பார்வை சராசரி மனிதனுக்கு வாய்ப்பதில்லை! ஒரு நல்ல படைப்பாளனால் மட்டுமே இதனைக் கவித்துவ உணர்வோடு அணுகமுடியும் என்று தன்னைத் திறந்து காட்டுகிறது. ஒரு தேர்ந்த படைப்பளாரால் மட்டுமே தன் உடலைச் சித்திரமாக வரைந்து கலையாக உருவாக்க முடியும் என்பதால்தான் அவள் நிர்வாணமாக நிற்க துணிகிறாள். இங்கே வரைபவன் மட்டும் நிர்வாணத்தைக் கலையாக மாற்றும் வித்தை அறிந்தவனல்ல, கலைக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தவளும் கலைஞனாகிவிடுவாள். தூய…
சச்சரவு. வெகு தூரம் வந்துவிட்டதாக விசனத்தின் வலியில் துடித்தழுதபொழுது அவன் ஆழ்துயிலில் இருந்தான் கிழவி விழித்திருந்தாள் வீடு அசைந்தாடியது காற்றின் போக்கில். *** பிரவாகம். இறுதி செய்யப்படாத எல்லா பிணக்குகளிலும் அவள் பூ முடைகிறாள். அவன் பூக்கொய்கிறான். குழந்தை சலிப்படைகிறது காத்திருத்தலின் பொருட்டாக. *** தோள் நிற துயரம். ஒவ்வொரு முறையும் சிரேஷ்ட குமாரர்களின் மிருக வதையெனும் மீட்சிக்கு. மனிதனுக்குதான் களிம்பிட வேண்டியதாகிறது வாளிப்பான பசுவிற்கு முன்னால். *** பாத…
சக்கை
வெயிற் பொழுதின் தகிப்பிலொரு காங்கையில் வெக்கையும் வேர்வையும் மூச்சிறைப்புக்குமிடையே பல நாட்களும்....
கடும் மழை கொடுங்குளிர் நரம்பறுக்கும் நாளைய கனவுகளுடன் தள்ளாட்ட நடையிலாங்கு ஒட்டி உலர்ந்த என்பினூடே சுமைபொதியுடன் நகருமவன் கழுதையுமல்ல குதிரையுமல்ல நெய்குடி வண்டியுமல்ல ....
புலர்வேளை தொடங்குமுன்னே ஆறேழு பசித்த வயிறுகளை... வயிற்றுக்கப்பால் அழுத்தும் தவிர்க்கவியலாத் தேவைகளை... நெஞ்சில் புதைத்தேகும் நகரோரத் தெருக்களில் விட்டெறியப்பட்ட…