Skip to content Skip to footer

Blog Classic

ஊரில் மீதமிருக்கும் அலர்
குப்பையில் பூத்த சாமந்தியின் மேல் கொல்லையில் வளர்ந்த வாழை நாருக்கு மனம் கொள்ளா காமம் மலர்ச்சரம் ஆகலாமா என்றான். அவளுக்கும் மையல்தான் இருந்தாலும் அச்சம் புஞ்சைக்கு உரமாக்கிவிடுவார்கள் என்றாள். உள்ளூற பயம் ஊறினாலும் நெஞ்சிரண்டிலும் கள்ளூறியது. இரவுக்குறியில் சந்திப்பு, இதழ் தொட்டுப் பயின்ற காதல் சரம் தொடுத்து ஆடியது. நெருப்பே வைக்காமல் எள்ளுக்கட்டு புகையும் என்பதை அவள் அறிவாள். ஆயினும் அவர்கள் அறுவடையை நிறுத்தவில்லை. எள்ளுப்போர் உயர்ந்த நாளொன்றில் தன் சங்குக் கழுத்துக்கு கத்தித் தீட்டப்படுகிறதென்று சொன்னாள். குப்பைக்குத் தீ வைத்த பிறகும் சாமந்தி மலர்ந்தாடியது வாழையில் கத்தி வைத்தாலும் நாருக்கு காமம் தீரவில்லை கண் காணா இடத்துக்கு ஊரைவிட்டு ஓடிப்போனார்கள். எங்கிருந்து பாம்பு வரும் எப்பொழுது தேளு வரும் என்று செத்துப் பிழைத்து கற்பில் நுழைந்தார்கள் ஓடுகிறது பிழைப்பு . ஆனால், ஊரில் அவர்கள் விட்டு…
இரண்டு-காடைகள்
மக்காச்சோளம் ஒடிப்பதை நிறுத்திவிட்டு காடைகள் ஓடி மறைவதைப் பார்த்துக்கொண்டிருந்தாள், பால் கள்ளிக்குள் பதுங்கியவை வெளியேறவில்லை. சோளத் தோகைகள் உடம்பை உரசும் ஒலி குறைத்து மெதுவாய் ஒரு காட்டுப்பூனையைப்போல் காடைகள் பதுங்கிய வேலியை நெருங்கினாள். "புகுபுகு புகுபுகு" என்றொரு குரல். கருஞ்சிவப்பு உதடுகளைக் குவித்து பறவைகள் அஞ்சிடாத விசில் கொடுத்து அவனை அழைத்தாள். ஒரு கைத்தடியைத் தூக்கிக்கொண்டு மெல்ல இன்னொரு பூனையைப்போல் சோளத்தட்டைக்குள் நகர்ந்தான் அவனுடைய உருமா கட்டையும் பதுங்கி வந்த தோரணையையும் கண்டவள் தன் எள்ளுப்பூ மூக்கைச் சுருக்கி சிணுங்கலாய் ஒரு கவிச்சை வார்த்தையைச் சொன்னாள். காது வழியே ஒரு கேலி மொழி போவதுபோல் உணர்ந்தவன் தலை தூக்கிக் கண்ணடித்தான். வாய்க்கு வெளியே சொல் வராதவாறு "கட்டை எதற்கு" என்றாள். அவனும் அதுபோலவே "காடை அடிக்கத்தான்"என்றான். கண்களை ஆந்தையைப்போல் சுழட்டியவள் "மொவறக்கட்டை" என்றுவிட்டு அதைப் போட்டுவிட்டு அருகே வாவென்று அழைத்தாள். "சிறுக்கி…
நிலம் எனும் நல்லாள்
தாங்கள் வாழும் திணைகள், அதன் அரசியலை, வாழ்வியலை வரலாற்றில் இடம் பெறச் செய்பவர்களில் படைப்பாளர்களே முதலிடம் வகிக்கிறார்கள். அவர்கள் புனையும் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் ஊடாகவும் அபுனைவு ஊடாகவும் தங்கள் சமகால வாழ்வியல் சிக்கல்களையும் அதற்குள் கொண்டுவந்து விடுகிறார்கள். எனவே படைப்பாளர்கள் வழியேதான் சமகாலத்தில் வாழ்ந்த மக்களின் சமூக அரசியலை அதன் பண்பாட்டைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதற்குச் சங்ககாலக் கவிதைகளையே முன்னோடியாக எடுத்துக்கொள்ளலாம். அதன் வழி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரான மாநுட நாகரிகத்தை படைப்பின் வழியே நாம்…
காமம் விளைந்த சோளக்காடு
சோளக்காடுகளுக்கு குருவிகள் வரத் தொடங்கிவிட்டன. விளைச்சலில் நமது பங்கை எடுக்க வேண்டுமென்று ஊரே பொம்மைகள் செய்யத் தொடங்கியது எல்லாம் ஆண் பொம்மைகள் கண்கள் பெரிதாக, முறுக்கிய மீசையுடன் தொப்பிப் போட்ட பொம்மைகள். காலங்காலமாக கதிர்களுக்கு நடுவே ஆண் பொம்மைகள் நிற்பதைப் பார்த்துப் பழகிய குருவிகள் அஞ்சி அஞ்சி தானியங்களைத் தீண்டுவதையும் வானில் வட்டமிட்டமிடுவதையும் நான் விரும்பவில்லை. நான் மட்டும் பெண் பொம்மை செய்தேன். சாயம் போகாத சிவப்புச் சேலை ; நீலப்பூ பூத்த வெள்ளை ரவிக்கை ; தொடைவரை சவுரி முடி ! கொத்தாக வைத்த ஆவாரம்பூ; பாலாடையில் கோலியை வைத்து சுண்ணாம்பால் பாவை பூசிய கண்கள்; கள்ளிப்பழத்தால் நிறம் கூட்டிய வாய்; மற்ற காடுகளில் நிற்கும் முழுக்கைச் சட்டைப் போட்ட ஆண்…
பித்துநிலையின் முதல் செய்யுள்
கடைமடையில் நீர் வழியும் ஏரியைக் காமுறுகிறேன் மூர்க்கமாகப் பாய்கிறேன் அலையில் தளும்பும் ஆம்பல் பறித்து மார்பில் போட்டுக்கொண்டு உடம்பை மல்லாத்தி நீந்துகிறேன் முங்கி ஆழத்துள் சென்று நாணலின் வேரைத் தோண்டுகிறேன் சேற்றில் புதைந்த கிழங்கை நாவால் தீண்டுகிறேன் நீரில் நழுவும் மீனைப்பிடித்து ஆரத்தழுவுகிறேன் அரற்றுகிறேன் கள்வெறி ஊறுகிறது மாமழைக் கொட்டுகிறது.

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]