Skip to content Skip to footer

கவிதைகள்

கவிதைகள்

அம்மாவின் சிட்ரிசின் மேகங்கள்

அம்மாவின் பொறுமை சகிப்புத்தன்மை எதையும் கொடையாக நான் பெறவில்லை அவளது நுரையீரல் தொடங்கி பலவீனமானதெல்லாம் எதுவோ அதையே அவளின் பிள்ளையாக நான் பெற்றிருக்கிறேன் நினைவு பயின்ற நாள்முதலாய் மருந்துகளுடனயே வாழ்ந்துவருபவள் என்றாலும் இந்த வயதிலும் உளநலத்துக்கான மாத்திரைகளை உட்கொள்ளவில்லை அவள் தாதியாகப் பணியாற்றியதால் அலோபதி மாத்திரைகளும் மருந்துகளும் ஊசிகளும் ஆஸ்பத்திரியின் வாசனையும் ஆதியிலேயே என் உடலுக்குப் பரிச்சயம் மழைக்காலங்களிலும் வியர்வை பெருகும் வேனல் நாட்களிலும் மூச்சுவிடத் திணறி என் நுரையீரல்…

ம.கனகராஜன் கவிதைகள்

1. என் நாட்குறிப்பைக் கொட்டி வைத்திருந்த கடற்பேழையில் உடைந்த இதயத்தை நுழைத்து எதையெதையோ தேடுகிறது என் நதி ஆவேசத்தோடு என் உயிரின் இரகசியக் குறியீட்டை கண்டுபிடித்து விடுமோ என்ற பயத்தோடு பனி சூழ்ந்த கரையில் நான் காவலிருக்கிறேன் சின்ன…

உழை

என் தாத்தா முழு நேர விவசாயி அப்பா பகுதி நேர விவசாயி நானும் என் இளமையில் அரைகுறை விவசாயிதான் என் மகன்களுக்கோ ஒரு மடைமாற்றவும் தெரியாது இன்று உழவின் சுவாசம் முனகிக் கொண்டிருக்கிறது பூனையை அஞ்சி சுண்டெலிகள் ஆகாரம் தேடி பீக்காடுகளில் அலைகின்றன மாமழைப் போற்றிய மண்ணில் கிணறுகளை வற்றக் குடித்தும் தாகம் தீரா ஆழ்துளை…

நண்பு

இன்றைய பிறந்தநாளில் சந்திப்பதாய் நேற்று மாலை விடைபெற்றிருந்தோம் இரவு ஒரு கனவு கண்டோம் நாளை விடியலில் இறந்திருப்பதாக இருந்தும் கவலை அற்றிரு நண்பா நேற்று முன்தினம்வரை நாம் வாழ்ந்திருந்ததேபோல் நாளை மறுநாளில் பிறந்தும் இருக்கலாம்.

நீங்குகை

உயிரற்ற பொருள்களிடம் கருணைகொண்ட கடவுள் உயிர்ப்பைத் தந்து விரும்பும் வரத்தையும் தருவதாய் அவ்வவற்றின் விருப்பத்தைக் கேட்டார் மொத்தக் குரலும் தம் ஆதியிடம் செல்வதையே அழுத்தமாய் சொல்லின ஆகட்டும் என ஆண்டவன் அருள அடுத்த கணம் மனிதன் அகழ்ந்தெடுத்த உலோகங்கள் அனைத்தும் பூமியின்…

அறிவினா

இந்தக் கணத்தில் இவ்வுலகையே தலைகீழாக்கிடும் வல்லமையைப் பெற்றவன் யாராம் எனக் கேட்ட கிருஷ்ணனிடம் வல்லமையைப் பெற்றவன் யாராம் என திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தான் தெருக்கூத்தில் கட்டியக்காரன் எங்கோ தூர தூரத்தில் பார்வையாளர்கள் நகைப்பதை தலை குப்புற பார்த்துக்கொண்டு வலையில் வீழ்ந்து கொண்டிருக்கிறான் சர்க்கஸ் கோமாளி.

படிமக் கவிதை

நெகிழியே நள்ளிரவு நிசப்தத்தில் வீசிய சிறு காற்றுக்கு தார்ச்சாலையில் ஒலியெழுப்பி உருண்டு வந்த குவளையே கவிஞரின் அக்காலத்திலிருந்து கவிதையின் இக்காலத்துக்குள் புரண்டு வந்த படிமமே ஆரடித்ததாலே அரவமற்ற சாலையில் ஆதரிக்க ஆளின்றி அரற்றி வந்தாய் குழந்தையே உலகம் வெறுத்தொதுக்கும் உனக்கபயம் அளிக்க குப்பையாகத் தொட்டியாக நிற்பேன் தயங்காது என் மடிக்குத் தாவி வா என் செல்லமே. (நன்றி:தேவதச்சன்)

உறைகாலம்

கரிச்சான் அடங்கிக் கோழிகள் கூவுகின்றன கனவிலிருந்து மீண்டெழுந்து மீந்ததை மெல்லும் காரிருட்டு எருமைகள் தண்ணீர் சேந்தி சாணம் தெளிக்கும் வாசல் ஓசைகள் விடியலில் விடியலை விடியலால் இசைக்கும் பறவைகள் போர் உதற களத்துக்கு வம்பளந்து செல்லும் போர்வை உதறா அம்மையர் வைக்கோல் பரப்பி கோணிப்படுதா கட்டிய திண்ணைப் படுகை பக்கத்தில் சயனித்திருந்த தாத்தா என்னை விலக்கி பீடி…

கற்பித்தல்

அவள் ஒரு கொடுமைக்கார தாய் பழம் பறித்து மடியில் வைத்துக்கொண்டு ஊட்டிவிடாமல் காட்டுக்குள் ஓடுடா என்று முதுகில் அடித்து விரட்டுவாள் தூக்கி மரக்கிளையில் ஏற்றிவிட்டு காவலுக்கு நிற்காமல் போய்விடுவாள் புதர்களில் பிடித்துத் தள்ளிவிடுவாள் முழு நீரோட்டமிருக்கும்போது ஆற்றுக்கு மறுபக்கமிருக்கும்…

ஊரில் மீதமிருக்கும் அலர்

குப்பையில் பூத்த சாமந்தியின் மேல் கொல்லையில் வளர்ந்த வாழை நாருக்கு மனம் கொள்ளா காமம் மலர்ச்சரம் ஆகலாமா என்றான். அவளுக்கும் மையல்தான் இருந்தாலும் அச்சம் புஞ்சைக்கு உரமாக்கிவிடுவார்கள் என்றாள். உள்ளூற பயம் ஊறினாலும் நெஞ்சிரண்டிலும் கள்ளூறியது. இரவுக்குறியில் சந்திப்பு, இதழ் தொட்டுப் பயின்ற காதல் சரம் தொடுத்து ஆடியது. நெருப்பே வைக்காமல் எள்ளுக்கட்டு புகையும் என்பதை அவள் அறிவாள். ஆயினும் அவர்கள் அறுவடையை நிறுத்தவில்லை. எள்ளுப்போர் உயர்ந்த நாளொன்றில் தன்…

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]