Skip to content Skip to sidebar Skip to footer

All Posts

இன்பா கவிதைகள்

1 வெள்ளிக்கிழமை மதியம் தனிமைப் பொழுது மெல்ல ஓய்வு கேட்டு மந்த நடைபோடுகிறது உடலற்ற கபாலத்தைத் திருகி ஒளிச்சிதறல்களுக்கிடையே இழுத்துப்பிடித்து வேலையை முடிக்கிறேன் வாரத்தின் ஐந்து நாட்களும் ஓநாய் தினங்களாகி இருபத்து நாலுங்கீழ் ஏழு பொழுதும் ஒளியின் முடிச்சிக்குள்…

நகுலன் விட்டுச்சென்ற வழிகள்

எல்லாமே வெகு எளிமையாகத்தான் இருக்கிறது ஆனால் எல்லாம் என்பதுதான் என்ன என்று தெரியவில்லை. - நகுலன் ( எல்லாம் என்பது பற்றி ஒரு கவிதை ) 1980, மே மாதம், திருவனந்தபுரம், கவடியாரிலுள்ள அவரது வீட்டில் நகுலனைச்…

நாரணோ ஜெயராமன் கவிதைகள்

நாரணோ ஜெயராமன் கவிதைகள் நாரண ஜெயராமன் தனது அனுபவத்தின் உள்ளுணர்வினை மனத்துள் நிரப்பிக்கொண்டு சுயத்தைக் கண்டறியும் ஆவலோடு புது உக்கிரம் பெற்ற கவிதைகளைப் படைத்துள்ளார். அன்றாட வாழ்வியல் குறித்து தனது பார்வையை எளிமையான வரிகளில் சொல்லப்பட்டிருந்தாலும் அதனுடைய பொருள் திண்மையாக இருக்கிறது.…

ப.அ.ஈ.ஈ அய்யனார் கவிதைகள்

1 ஊருக்கு தெக்க ஒசந்திருச்சு கட்டிடம் ஒத்தப்பனையெல்லாம் செத்தப்பனையாச்சே ஊத்துப் போன வாய்க்காலும் நாத்துப் பாவிய நெல்வயலும் வித்துப் போச்சே விலைமகனுக்கு களையெடுத்த கைகளை கனலிட்டு சுட்டுவிட்டான் கார்ப்பரேட் நலவாதி... அரமரக்கா நெல் வெதச்சு ஆடயுங்கோடயும் கதிரறுத்து ஆதிக்கும் அய்யனுக்கும் படியளந்து…

சரவணன் மாணிக்கவாசகம் – நூல் அறிமுகம்

தப்பரும்பு - ப்ரிம்யா கிராஸ்வின் தமிழ்க்கவிதைகளில் புரிதல் எவ்வளவுக்கு எவ்வளவு வாசகர்களுக்குக் குறைகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு சிறந்த கவிஞர் என்று யார் முதலில் சொன்னார்கள் தெரியவில்லை.  எளிமை என்பது வேறு, அழகியல் என்பது வேறு, நுட்பம் என்பது வேறு.  ஒன்றுக்கொன்று தொடர்பில்லை. நூலின் முதல் கவிதையே…

சித்துராஜ் பொன்ராஜ் கவிதைகள்

விரைவில் வெளியாகவிருக்கும் ‘தலையில் பிறைசூடிய பெண்கள்’  கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்) 1 வார்த்தைகளை மலர்த்தண்டுகளாய் வழவழப்பாக்கத் தெரிந்தவர்களுக்குத்தான் இந்தச் சாகசம் கைவரும் - ஒரு கொத்து வார்த்தைகளை அடியில் சிவப்பு நிற ரிப்பன் கட்டியும் நீர்க்கோலங்களாய் ஒரு தாளைச் சுற்றியும்…

வேல்கண்ணன் கவிதைகள்

காலாவதியான கடவுச்சொல் சமீபத்தில் பிரிந்த  காதலியின் பிறந்தநாளை  கடப்பது குறித்து நள்ளிரவு கவிஞனின் கையேடுகள்  ஏதேனும் கிடைக்கிறதா? அடுத்த வருடத்திற்குள் நேற்றிலிருந்து நாளைக்குத் தாவுவதற்கு  மந்திரம் கற்க வேண்டும். வலியோடு முறியும் மின்னலை இணைக்க வழியேதும் உண்டாவன  பிரான்சிஸ் கிருபாவிடம் கேட்டிருக்க வேண்டும் தனித்துக் கிடப்பது குறித்தெல்லாம் ஏகப்பட்ட குறிப்புகள்…

இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள்

விடம்பனக் களிறு   மூங்கிற் புல்லை பாங்குற தறித்து வாங்கிய பரணில் தினைபுனம் காக்கும் சேனோன் வானுற விளைந்த காட்டுயானமும் கருவுப்பரிசியும் சிதையக் குலைக்கும் களிறுகளை சிதைத்த கதை இது இதை நான் உங்களுக்குச் சொல்வேன் என்றான் சூதன்   (வேறு)…

மேரி ஆலிவர் – மொழிபெயர்ப்புக் கவிதைகள்

1.மரங்களைப் பற்றிய கனவு என்னுள் உள்ள ஒன்று மரங்களைப் பற்றிக் கனவு காண்கிறது. அமைதியான வீடு, கொஞ்சம் பசுமை, ஓரளவு இடம் தொல்லைப்படுத்தும் நகரத்தின் சலம்பல்களிலிருந்து கொஞ்சம் தள்ளி.. தொழிற்சாலைகளிலிருந்தும் பள்ளிகளிலிருந்தும் புலம்பல்களிலிருந்தும் சற்றே விலகி.. எனது வாழ்விலிருந்து சில கட்டற்ற…

தருணம்

சொல்லால் முகிழ்க்கும் பித்து உனக்கும் எனக்கும் இடையில் கண்ணே எந்தத் தருணத்தில் எப்படி நிகழும் அது மார்க்கமில்லாதது அபாதா அது வரம்பில்லாதது அனந்தகோரா அது நிறமில்லாதது தயாபரா யாருடையது இந்த எதிர்க்குரல் எங்கிருந்து வருகிறது அது என்னைச் சுற்றி எல்லாம் ஆவியாகிக்கொண்டிருக்கிறது…

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]