Skip to content Skip to sidebar Skip to footer

All Posts

மாயத்தைக் கட்டும் கவிதை!

கவிஞர் விக்ரமாதித்யன் ஒருமுறை ’மாயத்தைக் கட்டுவதே கவிதை’ என்று ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார். எனக்கு அந்தச் சொற்கள் மனதுக்குள் உருண்டுகொண்டேயிருக்கின்றன. அதன் உள்ளார்ந்த பொருள் என்னவாய் இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். விக்ரமாதித்யன் சொன்ன சூழலலமைவைக் கடந்தும் அந்தச் சொற்கள் ஒரு தத்துவார்த்த…

தமிழ்க் கவிதைக்குள் திணையென்னும் படிமம்

இந்தக் கேள்விகள் கவிதைகளை எழுதுபவர்களின் கேள்விகள் அல்ல. கவிதை வாசகர்களின் கேள்விகளும்கூட அல்ல. ஆனால் இலக்கியத்திறனாய்வு என்னும் விமரிசனம், “கவிதையை எப்படி வாசிப்பது?” என்ற கேள்வியில் தொடங்கி, “கவிதை எவ்வாறு உருவாகிறது?” என்பதை விளக்கிக் கொண்டே இருக்கின்றது. இப்படி விளக்குபவர்களை திறனாய்வாளர்கள்…

சிங்கப்பூர் கவிதைவெளியின் புதிய பாய்ச்சல்

சென்ற மே 21-ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடைபெற்ற இன்பாவின் ‘லயாங் லயாங் குருவிகளின் கீச்சொலிகள்’ கவிதைநூல் வெளியீடு மற்றும் திணைகள் இணைய இதழ் தொடக்க விழாவில் கவிஞர் பெருந்தேவி முன்வைத்த ஒரு கருத்தாடல் கவனம் பெற்றது. சிங்கப்பூர் தமிழ்…

நிழல், அம்மா.

புதிய கவிதை  நூல் நிழல், அம்மா பற்றி... நேசத்தின் கிடைமட்டப் பரப்பில் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் கடந்த நான்காண்டுகளில் எழுதப்பட்டவை. ஒட்டுமொத்தமாகப் படிக்கும்போது எனது கவிதை வெளியீடு இரண்டு விதமாக இதில் வெளிப்பட்டிருக்கின்றன என்று தோன்றுகிறது. உள்ளடக்கமும் மொழியும் சார்ந்து அவற்றை குழப்பமும்…

அருண் குமார் சாஹூ கவிதை

சாலை சேற்றுச் சாலைகள், தார்ச் சாலைகள், கிராமச் சாலைகள், நகரச் சாலைகள், நெல்வயல்களின் குறுக்கே சாலைகள், விளையாட்டு மைதானத்திற்குச் செல்லும் சாலைகள், சந்துகள், தெருக்கள், நெடுஞ்சாலைகள், அதிவேக நெடுஞ்சாலைகள், சில நேராக, சில பாம்புபோல; சில வெறிச்சோடி, சில நெரிசலாக; இருளுக்குப்…

நான்யா சுதிர் கவிதை

நான் எப்படித் துவங்குவது? நான் உனக்கு என்ன சொல்வது ஒரு கடலோரத்திலிருந்து மற்றொன்றுக்கு எதுவும் இல்லாமல் யாரும் இல்லாமல் என் எண்ணங்கள் மட்டுமே இருந்த இந்த நீண்ட பயணங்கள் பற்றி. நான் ஒரு பாடல் எழுத வேண்டும் என்றால் நான் உன்னிலிருந்து,…

மேகி ஸ்மித் கவிதை

நல்ல தூண்கள் - மேகி ஸ்மித் வாழ்க்கை குறுகியது, ஆனாலும் நான் இதை என் குழந்தைகளிடம் சொல்லாமல் தவிர்த்துவிடுகிறேன். வாழ்க்கை குறுகியது, நான் என்னுடையதை ஆயிரக்கணக்கான சுவையான, தப்பான ஆலோசனைகளின் வழிகளில் குறுக்கிவிட்டேன். ஆயிரக்கணக்கான சுவையான,…

லல்லா கவிதைகள்

லல்லா கவிதைகள்   (1) தென்புல மேகங்களை கலைந்தோடச் செய்வேன். கடலை வற்ற வைக்கவும் கைவிடப்பட்ட நோயாளியைக் குணப்படுத்தவும் கூட என்னால் ஆகும். ஆனால், ஒரு முட்டாளின் எண்ணப்போக்கை மாற்றுவதென்பதோ என் சக்திக்கும் அப்பாற்பட்டது. (2) விளையாட்டாக என்னிடமிருந்து நீ ஒளிந்துகொள்கிறாய்! நாள் முழுவதும் நான் தேடுகிறேன் பிறகு, நானேதான் நீயென்பதை அறிகிறேன். அந்தக் கொண்டாட்டம் இப்போது ஆரம்பித்துவிட்டது. (3) பொதுச்சாலை வழியேதான் வந்தேன் ஆயினும் அதன் ஊடாகத் திரும்பிப் போகவியலாது பயணத்தின் நடுவே பாதிவழியில் நிற்கிறேன். பகல் முடிந்து இரவு தொடங்குகிறது. எனது…

பூவிதழ் உமேஷ் கவிதைகள்

பெண் ஆணின் இதயத்தை வெல்லும் விதம் ஆணின் ஒரு கேள்விக்கு பெண்ணிடம் பல பதில்கள் உள்ளன கேட்பவர் யாரென்றறிந்த பிறகு அவள் பதிலை வெளிப்படுத்துகிறாள் அப்பெண் ஓர் ஆணின் இதயத்தை வெல்லும் விதம் அவனைக் காதலிப்பதாக…

கீதாரியின் உப்புக்கண்டம் கவிதைகள்

1 ஆடுகள் வலசை போகையில் குட்டிகளை ஈன்றுவிட்டால் இடையனுக்குச் சுமை தெரியாது மாடுகள் காளைக் கன்றுகளை ஈன்றுவிட்டாலும் சுமையாகத் தெரியாது இதோ இந்தக் கராமறையாடு வலசை போகையில் ஈன்றது என்றும் இதோ இந்தக் கிளிக்கொம்பாடு அந்தி மறைகையில் ஈன்றுது என்றும்! இதோ இந்தக் காரிக்காளை ஒரு மதிய நேரத்தில் உச்சிவெயிலில் பிறந்ததென்றும் நினைவில் வைத்துக்கொள்வான் சுமை யெல்லாம் நீரின்றி வறண்டு…

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]