Skip to content Skip to footer

கவிதைகள்

கவிதைகள்

மலைச்சாமி கவிதைகள்

நம்மை உய்விக்க வந்ததாக நம்பப்பட்ட மார்க்சிய கருத்தியலோடு, நம்பிக்கைகளும் தோற்று ஒரு நிரந்தர வெயிலுக்குள் மானுடம் பயணிக்கத் தொடங்கியதை வலுவாக அறிவித்த கவிக்குரல் மலைச்சாமி. வெங்கரிசல் என்று சொல்லப்படக்கூடிய ஒரு நிலப்பரப்பின் பிரத்யேக உள்ளடக்கத்தையும், உணர்வுகளையும் சேர்த்து உலகளாவிய தன்மையை நோக்கி…

பூவிதழ் உமேஷ் கவிதைகள்

பெண் ஆணின் இதயத்தை வெல்லும் விதம் ஆணின் ஒரு கேள்விக்கு பெண்ணிடம் பல பதில்கள் உள்ளன கேட்பவர் யாரென்றறிந்த பிறகு அவள் பதிலை வெளிப்படுத்துகிறாள் அப்பெண் ஓர் ஆணின் இதயத்தை வெல்லும் விதம் அவனைக் காதலிப்பதாக…

கீதாரியின் உப்புக்கண்டம் கவிதைகள்

1 ஆடுகள் வலசை போகையில் குட்டிகளை ஈன்றுவிட்டால் இடையனுக்குச் சுமை தெரியாது மாடுகள் காளைக் கன்றுகளை ஈன்றுவிட்டாலும் சுமையாகத் தெரியாது இதோ இந்தக் கராமறையாடு வலசை போகையில் ஈன்றது என்றும் இதோ இந்தக் கிளிக்கொம்பாடு அந்தி மறைகையில் ஈன்றுது என்றும்! இதோ இந்தக் காரிக்காளை ஒரு மதிய நேரத்தில் உச்சிவெயிலில் பிறந்ததென்றும் நினைவில் வைத்துக்கொள்வான் சுமை யெல்லாம் நீரின்றி வறண்டு…

யவனிகா கவிதைகள்

சிள்வண்டுகள் இரவின் காலிக்கோப்பையை குளிர் நிரப்பும் நேரம் அனைத்தும் மிகத்தொலைவில் விலகி இருக்கின்றன அதிகம் நோயுற்றுவிட்டதாய் பூமி அலுத்துக்கொள்கிறது அனைந்த நட்சத்திரங்கள் நங்கூரமிட்ட படகு மற்றும் உன் சோபிதம் நிரம்பிய கண்கள் சம்மதத்தின் துயரமானது பூமியின் நாட்பட்ட கடமைகளைக்…

தயாஜி கவிதைகள்

பொம்மி என்ன பெயர் அது யாரின் பெயர் அது என எப்போதுமான கேள்வி ஒன்று என்னை துரத்திக்கொண்டே இருக்கிறது இனிமேலும் ஓட முடியாது ஓடுவதற்கு தூரமும் கிடையாது ஒரு குழந்தையை நீங்கள் எப்போது தூக்கிக் கொஞ்சினீர்கள் எப்போது கண்டித்தீர்கள் எப்போது குதிரை…

சித்துராஜ் பொன்ராஜ் கவிதைகள்

Harlem-இல் லோர்கா ஒரு கறுப்பனின் மரணத்திற்கு ஃப்ளெமெங்கோ பாணி பாடல்.. இந்த நகரம் என்னும்                     கைத்துப்பாக்கி                  உன்னையும் என்னையும்              நிரந்தரமாய்க் குறிபார்த்தபடி                             இருக்கிறது.    நல்லதொரு கைத்துப்பாக்கி         அமைவதைப் போலவே                   கைக்கு…

தில்லை கவிதைகள்

கோப்பத்தை   நான் விசர் பிடித்து உழத்துகிறேன் பாலியத்தின் மையத்தில் மோதுண்டு எழும் பேய்க்காற்று என்னை உசுப்பி உசுப்பி என் கமுகிலிருந்து பாக்கும், கோப்பத்தையும் கொட்டுகின்றன சாமத்தியக் குடத்திலும் கண்ணகியின் மடையிலும் விரிந்திருந்த கமுகம் பாளைகள் மின்னி மின்னி பூச்சியாய்…

மணமாய்க் கரைகிறேன்

உங்களுக்காக நான் உங்களுக்காக கரைகிறேன் முற்றும் முழுதும் உங்களுக்கே என்னைப்போல் உங்களுக்காய் யாருமில்லை என்னையும் நீங்கள் விட்டுக்கொடுத்ததில்லை உங்கள் பெற்றோரும்  உடன் பிறந்தோரும்கூட என்னைப்போல் கரைந்ததில்லை உங்களுக்காக கரைவதற்காகவே நான் ஒவ்வொரு நாளும் கரைவதற்குக் காத்திருப்பதும் நான்தான் என்ன? இப்பொழுதாவது…

முதல் பாடல் 2

தொஷ்டா! நீ அழைத்தால் என்னால் வராமல் இருக்க முடியாது என் கண்களைக் குருடாக்கிக்கொள்கிறேன் காதுகளை பழுக்கக் காய்ச்சிய கம்பிகளால் செவிடாக்கிக்கொள்கிறேன் என் இதயத்தைப் பிய்த்து நாய்களுக்கு வீசுகிறேன் அப்போதும் உன் குரல் எனக்குக் கேட்கிறது உன் உருவம் எனை அழைக்கிறது…

அழைப்பு

பொது யுகம் 2536 அந்த மூத்த எழுத்தாளர் நேர்காணலில் அமர்ந்திருக்கிறார் கடந்த காலத்திலிருந்து யாரையாவது திரும்ப அழைக்க நேர்ந்தால் யாரை அழைப்பீர்கள் அவர் சற்றும் யோசிக்காமல் சொல்கிறார் 1996ல் இறந்து போன என் மனைவி ஒரு கணம் நிசப்தம்…

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]