குப்பையில் பூத்த சாமந்தியின் மேல்
கொல்லையில் வளர்ந்த வாழை நாருக்கு
மனம் கொள்ளா காமம்
மலர்ச்சரம் ஆகலாமா என்றான்.
அவளுக்கும் மையல்தான்
இருந்தாலும் அச்சம்
புஞ்சைக்கு உரமாக்கிவிடுவார்கள்
என்றாள். உள்ளூற பயம் ஊறினாலும்
நெஞ்சிரண்டிலும்
கள்ளூறியது.
இரவுக்குறியில் சந்திப்பு,
இதழ் தொட்டுப் பயின்ற காதல்
சரம் தொடுத்து ஆடியது. நெருப்பே வைக்காமல்
எள்ளுக்கட்டு புகையும் என்பதை
அவள் அறிவாள்.
ஆயினும் அவர்கள்
அறுவடையை நிறுத்தவில்லை.
எள்ளுப்போர் உயர்ந்த நாளொன்றில்
தன்…
16