Skip to content Skip to footer

கவிதைகள்

கவிதைகள்

முதல் பாடல் 2

தொஷ்டா! நீ அழைத்தால் என்னால் வராமல் இருக்க முடியாது என் கண்களைக் குருடாக்கிக்கொள்கிறேன் காதுகளை பழுக்கக் காய்ச்சிய கம்பிகளால் செவிடாக்கிக்கொள்கிறேன் என் இதயத்தைப் பிய்த்து நாய்களுக்கு வீசுகிறேன் அப்போதும் உன் குரல் எனக்குக் கேட்கிறது உன் உருவம் எனை அழைக்கிறது…

அழைப்பு

பொது யுகம் 2536 அந்த மூத்த எழுத்தாளர் நேர்காணலில் அமர்ந்திருக்கிறார் கடந்த காலத்திலிருந்து யாரையாவது திரும்ப அழைக்க நேர்ந்தால் யாரை அழைப்பீர்கள் அவர் சற்றும் யோசிக்காமல் சொல்கிறார் 1996ல் இறந்து போன என் மனைவி ஒரு கணம் நிசப்தம்…

கவியாலானது

யானையைக் குழி தோண்டி பிடிப்பது போல் கவிஞனைக் காதல் பிடிக்கிறது பரவசத்தின் சொற்கள் விம்முகின்றன அவனின் ஒளிகொண்ட சொற்களை வானில் எறிகிறது அவை விண்மீன்களாகின்றன இருண்ட சொற்களை பகல் காகங்களாக்குகிறது காதலின் அபோதத்தில் கவிஞன் பித்தாகிறான் அவன் அழுதபோது…

கானல் வரி

அவனை நான் மூன்று முறை பார்த்திருக்கிறேன் உலகத் திரைப்பட விழாவில் உன் அலுவலகத்தில் உன் படுக்கையில் என் கற்பனையில் அன்பே அது கற்பனை என்றே நம்ப விரும்பினேன். ஒரு நோயை நம்ப விரும்பாத அதைரியக்காரன் போல, இதுவெல்லாம் வெறும் கனவென்று…

சிவை

நேரசைக்கு 64 எழுத்துகள் நிரையசைக்கு 68 எழுத்துகள் அதுவே கட்டளைக் கலித்துறை என்கிறாள் காரைக்கால் அம்மை நானோ நிகோனர் பர்ராவின் ரோலர் கோஸ்டர்களை கவிதைக்குள் ஓட்ட முயல்பவன் தலை கீழாய் நடந்து உன் பதம் அடைவது என் இயல்பல்ல சிவையே

வேறு வழி?

Bynge Appஇல் ராஜேஷ் குமாரை பதினைந்து லட்சம் பேர் படிக்கிறார்கள் என்றார் ஒரு நண்பர் ஐரோப்பாவில் சார்லஸ் ப்யூகோவ்ஸ்கியை பத்து மில்லியன் பேர் படிக்கிறார்கள் என்றேன் நான் ஒரு வேண்டாத திகைப்பின் வாயை மூடுவதற்கு அடுத்த கண்டத்திலிருந்து கையைக்…

அதற்குள் மற்றொரு திரிபுற்ற வைரஸ் வந்துவிட்டது

நேற்றுத்தான் ஒன்று வந்தது போலிருந்தது அதற்குள் முகத்தை மாற்றிக்கொண்டுவிட்டது ஒரு திரிபுருவுக்கும் இன்னொன்றுக்குமிடையே காலம் குறையக் குறைய எனக்கும் உனக்குமிடையே தூரம் அதிகமாகி மேலதிகமாகிறது இப்போதெல்லாம் உன் முகபாவனைகள் மாறிவிடவில்லையே பேசும்போது இப்போதும் உன் வலது புருவத்தை உயர்த்துகிறாயா …

தமிழுக்குப் பன்றிக் கறிச் சுவை

அந்தக் குகையில் தொடங்கி, இந்தக் குகையில் முடிகிறது எல்லாம். இடையில் நிகழும் கனவுகள் யாவும், பழுதுற்ற காலயந்திரக் குழப்பங்கள். தந்தை தேவைப்படாத முட்டைகள் பாடிக்கொண்டிருக்கின்றன, உள்ளே. வேட்டைநாய்கள், பசிமயக்கக் கனவுகளில் எஜமானனைக் குதறித் தின்கின்றன. காமத்தில் பிசைந்த உணவு, ஞானச்சுரப்புக்கான பத்திய…

பூங்குழலி கவிதைகள்

1. மிக கவனமாக ஒவ்வொரு பந்தாக தரையில் வீசி அதன் இசையைக் கேட்பதில் உற்சாகம் இயலுக்கு சில பொழுதுகளில் இவளின் வீசுதலுக்கு இடையே தரையில் அதன்போக்கில் அசையும் பந்துகளுக்கு அவளே ஒலி எழுப்புவாள் பிறிதொரு நாளில் மழைக்குளத்தில் பந்துகளை…

முனியாண்டி ராஜ் கவிதைகள்

எங்கள்_குடும்பம் ஆண்டுக்கொரு முறை வரவு செலவு போடும்போது மூத்த பிள்ளைகளைப் பத்திரமாய் பார்த்துக் கொள்வாய் அப்பா ஆடைகளிலிருந்து அரைஞாண்கயிறுகள்வரை அதில் தங்க இழைகள் மின்ன வேண்டும் உண்ண மறுக்கும் … ம்ம்ம் .. சோம்பல்படும் அவர்களுக்கு ஊட்டிவிட கரண்டியொன்று கக்கத்திலேயே…

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]