Skip to content Skip to footer

கட்டுரைகள்

கட்டுரைகள்

மாயத்தைக் கட்டும் கவிதை!

கவிஞர் விக்ரமாதித்யன் ஒருமுறை ’மாயத்தைக் கட்டுவதே கவிதை’ என்று ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார். எனக்கு அந்தச் சொற்கள் மனதுக்குள் உருண்டுகொண்டேயிருக்கின்றன. அதன் உள்ளார்ந்த பொருள் என்னவாய் இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். விக்ரமாதித்யன் சொன்ன சூழலலமைவைக் கடந்தும் அந்தச் சொற்கள் ஒரு தத்துவார்த்த…

தமிழ்க் கவிதைக்குள் திணையென்னும் படிமம்

இந்தக் கேள்விகள் கவிதைகளை எழுதுபவர்களின் கேள்விகள் அல்ல. கவிதை வாசகர்களின் கேள்விகளும்கூட அல்ல. ஆனால் இலக்கியத்திறனாய்வு என்னும் விமரிசனம், “கவிதையை எப்படி வாசிப்பது?” என்ற கேள்வியில் தொடங்கி, “கவிதை எவ்வாறு உருவாகிறது?” என்பதை விளக்கிக் கொண்டே இருக்கின்றது. இப்படி விளக்குபவர்களை திறனாய்வாளர்கள்…

சிங்கப்பூர் கவிதைவெளியின் புதிய பாய்ச்சல்

சென்ற மே 21-ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடைபெற்ற இன்பாவின் ‘லயாங் லயாங் குருவிகளின் கீச்சொலிகள்’ கவிதைநூல் வெளியீடு மற்றும் திணைகள் இணைய இதழ் தொடக்க விழாவில் கவிஞர் பெருந்தேவி முன்வைத்த ஒரு கருத்தாடல் கவனம் பெற்றது. சிங்கப்பூர் தமிழ்…

நிழல், அம்மா.

புதிய கவிதை  நூல் நிழல், அம்மா பற்றி... நேசத்தின் கிடைமட்டப் பரப்பில் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் கடந்த நான்காண்டுகளில் எழுதப்பட்டவை. ஒட்டுமொத்தமாகப் படிக்கும்போது எனது கவிதை வெளியீடு இரண்டு விதமாக இதில் வெளிப்பட்டிருக்கின்றன என்று தோன்றுகிறது. உள்ளடக்கமும் மொழியும் சார்ந்து அவற்றை குழப்பமும்…

ஆர்த்தெழும் பெண் குரல்

அறிமுகம் எளிய அழகிய மொழியில் விடியலைத் தேடியபடி ஆரம்பமாகிறது, ‘கடல் முற்றம்’. சென்னை மோக்லி பதிப்பக வெளியீடாய் கிண்ணியா எஸ். பாயிஸா அலியின் 50 கவிதைகளின் தொகுப்பாய் 2017 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. கவிஞர் அனாரின் கனதியான முன்னுரையுடன் வெளிவந்த இந்நூலை முஹம்மத்…

வயலூறும் ஆட்டுரமும் மாட்டுரமும்

முல்லை நில மக்களின் வாழ்வியலைச் சொல்லும் முல்லைக்கலியில் எருமைகளை வளர்ப்பவர்களை ‘கோட்டினத்தார்’, பசுவை வளர்ப்பவர்களை ‘கோவினத்தார்’, ஆடுகளை வளர்ப்பவர்களை ‘ஆட்டினத்தார்’ என மூன்று வகையான ஆயர்ச் சமுதாயம் இருந்ததாகச் சங்க இலக்கியம் சொல்கிறது. நீட்டுரமும் தேட்டுரமும் நெல்லுரமும் ஆகையினால் ஆட்டுரமும் மாட்டுரமும் வயலுரங் காண் ஆண்டே என்ற…

மொழிகள் கடந்துலவும் பெண்களின் பாடுகள்

”பெண் தன்னை எழுதுதல் வேண்டும். பெண்களைப் பற்றி எழுத வேண்டும். பெண்களை எழுத்தின்பால் கொண்டுவர வேண்டும். பெண் தனது சொந்த இயக்கத்தின் மூலம் பிரதிக்குள் தன்னை வார்க்க வேண்டும்; இந்த உலகத்திலும் சரித்திரத்திலும் தடம் பதிக்க வேண்டும்.” - ”Laugh of…

இலங்கைப் பெண்களின் கவிதைகள்

இலங்கைப் பெண்களின் கவிதைகள் என்றால் அதில் தனியே தமிழ்க் கவிதைகளை மட்டும் கொள்ள முடியாது. சிங்களக் கவிதைளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் எடுத்துப் பேசும்போதுதான் இலங்கைப் பெண்களின் கவிதைகளைப் பற்றிய சித்திரம் கிடைக்கும். இரண்டு மொழிச் சூழல்களிலும் உள்ள சமூக,…

ஸ்ரீநேசன் ஆட்டும் ஊஞ்சல்

ஒரு நூற்றாண்டைக் காணப்போகும் புதுக்கவிதை, நவீன கவிதை வடிவத்தில் குறிப்பிட்ட சாதனையை நிகழ்த்திய கலைஞர்களின் படைப்புகளை என்னளவில் தொகுத்துக் கொள்ளும்போது அவர்களது மரபையும் சேர்த்துத் தொகுத்துக் கொள்வது அத்தியாவசியமான பணியாகவே தோன்றுகிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, தனித்துவத்தையும், அலாதிக் குணத்தையும் தக்க…

கன்னடக் கவிதை வளர்ந்து வந்த விதம்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கில இலக்கியத்தின் தாக்கத்தால் கன்னட இலக்கியமும் புதிய பரிமாணத்தை அடைந்து – பழம் கன்னடம் – இடைக்காலக் கன்னட இலக்கியங்களிலிருந்து மாறுபட்டு நவோதய இலக்கியம் என்ற புதிய வடிவத்தைக் கண்டுகொண்டது. இது புனைகதை, நாடகம், அபுனைவு, விமர்சனம்,…

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]