Skip to content Skip to footer

thinaigal

சிங்கப்பூர் கவிதைகளில் அழகியல்

முன்னுரை: கலைப்படைப்புகளில் அழகியல் (Aesthetics) என்பதை “இரசனை” என்று கூறலாம். கவிதைகளின் இயக்கமானது ஓடு கின்ற ஒரு நதியைப் போல இருப்பதால் வாசக அனுபவத்தின் மீதான தாக்கமும் பலவிதங்களில் அமைகிறது. கலைப்படைப்புகளைப் பொறுத்தவரை படைப்பும் அதை நுகர்பவனின் மனமும் இணைந்து அவன் வாழ்வின் சொந்த அனுபவங்களில் இருந்து குழைத்தெடுத்த வர்ணங்களிலிருந்து ஒரு ஓவியத்தையோ, திரவியங்களிலிருந்து ஒரு நறுமணத்தையோ அவனுக்கு வழங்குகின்றன. அதிலிருந்து அவன் அடையும் மகிழ்ச்சியோ கிறக்கமோ அல்லது விலகலோ அவனுக்கு அந்தப் படைப்பின் அழகியலை…

மேலும் வாசிக்க

சமகால நவீனக் கவிதைகளின் செல்திசை

முன்னுரை “கவிதை அதன் எல்லா அலங்காரங்களையும் கலைந்த பின் அதன் சொற்கள் உருவாக்கும் ஆதாரமான உணர்வெழுச்சியையும் அபோதத்தையுமே குறைந்தபட்ச அழகியலாகக் கொண்டவை நவீனக் கவிதைகள்” என்று கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார். சிங்கப்பூரில் எழுதப்படும் நவீனக் கவிதைகள் மேற்சொன்ன குறைந்தபட்ச அழகியலைக் கொண்டுள்ளனவா என்ற கேள்வியோடு கடந்த பத்தாண்டுகளில் வெளிவந்துள்ள நவீனக் கவிதைகளின் போக்கையும் அவற்றின் மீதான விமர்சனங்களையும் இக்கட்டுரை முன்வைக்கிறது. புதுக் கவிதை வரலாறு (1979 முதல் 2015 வரை)  “1979…

மேலும் வாசிக்க

சிங்கப்பூர்க் கவிதைகளில் தமிழகக் கவிதைகளின் தாக்கம்

சிங்கையில் வெளியாகும் கவிதைகள் மட்டுமல்லாது, நாவல்கள், சிறுகதைகள் போன்ற பிற இலக்கிய வடிவங்களுமே தமிழகப் படைப்புகளின் பாதிப்பைக் கணிசமான அளவிற்குத் தங்களுக்குள் ஊடுருவ அனுமதித்தபடியேதான் வெளியாகின்றன. இப்போக்கினைச் சிங்கப்பூரில் வெளியான ஆரம்பக்கட்ட படைப்புகளில் இருந்து தற்காலத்தில் வெளியாகும் படைப்புகள் வரையில் அவதானிக்கலாம். இதைப் பிழையென்றோ, போலச் செய்தல் என்றோ கருத முடியாது. ஒரு நிலப்பரப்பினின்று பிறிதொரு நிலப்பரப்பிற்குப் புலம் பெயர்ந்தவர்கள் தங்கள் ஆதி நிலத்துப் படைப்புகளின் பாதிப்பைத் தங்கள் படைப்புகளில் பிரதிபலிப்பது வெகு இயல்பானதேயாகும். இதுபோன்ற பெரும்பாலான…

மேலும் வாசிக்க

உடலை உடலால் பொருள் கொள்ளும் கவிதைகள்

றாம் சந்தோஷ் கவிதைகள் குறித்து பெரு விஷ்ணுகுமார். கவிதையின் அனுபவம் காலத்திற்கு அப்பாற்பட்டதென்று கூறிக்கொண்டாலும், கலையாக்கத்தில் ஈடுபடும் தன்னிலைக்கு ஒரு காலப் பிரக்ஞை இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதுதான் படைப்புக்குள் சில திட்டவட்டமான முடிவுகளை எடுக்கிறது, தொழில்நுட்பக் கருவிகளை, சொல்லலில் சில உத்திகளைத் திறம்படக் கையாள்கிறது. பிற்பாடு தன் பொலிவு குன்றி வாசகனிடம் கையும்களவுமாக மாட்டிக்கொள்ளவும் செய்கிறது. அது உருவாக்கித்தருகிற ஆளுமையைக் குறிப்பிட்டதொரு வரையறைக்குள் எடுத்துவருவது சிரமமானதே. கவிஞர். றாம் சந்தோஷின் மூன்று தொகுப்புகள் வரையிலான கவிதைகளின்…

மேலும் வாசிக்க

றாம் சந்தோஷ் கவிதைகளின் மொழி விளையாட்டு – ந.பெரியசாமி

சிறுமி வீட்டின் முன் இருக்கும் மரத்தினடியில் அமர்ந்து, நாய்குட்டி, பூனை, எலி, அணில், பன்றி குட்டி, எருமைக் கன்று என இவைகளை முன்னால் அமரச் செய்து, விளையாட தொடங்குகிறாள். சிறுமி ஆசிரியராகவும், மற்றவைகள் மாணவர்களாகவும் மாற்றம் கொள்கின்றனர். ஆனால் இங்கு மாணவர்கள் பாடம் நடத்தவும், ஆசிரியர் சந்தேகம் கேட்பவராகவும் இருந்தார். வேடிக்கைப் பார்த்த பெரியவர்கள் பைத்தியக்காரத்தனமென தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்தனர். காலகாலமாக பின்பற்றும் மரபை மீறியதற்காக அந்தச் சிறுமியைக் கடிந்தும் கொள்கிறார்கள். சிலபேர் இது புதிதாக…

மேலும் வாசிக்க

திணைகள் கவிதை விருது 2025

இயற்கைப் படிமங்களில் துலங்கும் மீமெய்மையியலும்; பண்பாட்டு வேர்களில் கருக்கொள்ளும் சர்வதேசமும்… பூவிதழ் உமேஷின் ‘துரிஞ்சி‘ கவிதை நூலை முன் வைத்து… - றியாஸ் குரானா தேர்வு என்பது எப்போதும் சிலவற்றைத் தவிர்ப்பதிலிருந்தே உருவாகிறது. எதை எழுத வேண்டும் எதை தவிர்க்க வேண்டும் என்பது எல்லாம், குறித்த ஒரு நோக்கத்தின் தற்காலிகமான அவசியத்தின் ஆழத்தில் புதைந்திருக்கின்றன ஒன்று. ஆனால், திட்டமிட்டு தவிர்ப்பது என்பதுதான் தணிக்கையாகவும் புறமொதுக்கலாகவும் மாறிவிடுகிறது. தணிக்கை என்ற சொல் அநேகமாக தேர்வு என்பதில் பதிங்கியிருக்கும்…

மேலும் வாசிக்க

மதார் கவிதைகள்

1. கூவிக்கொண்டும் அகவிக்கொண்டும் உறுமிக்கொண்டும் கீச்சிட்டும் குரைத்தும் இருந்தோம் மொழிக்கு முன்பு மொழி வந்தது நாசமாய்ப் போனது பேசிக்கொண்டு மட்டும் இருக்கிறோம் 2 காலை மாலையைப் போல நடிக்கிறது மாலையால் இரவு போல் நடிக்க முடிகிறது இரவு நடிப்பதில்லை அது அதன் இயல்பில் அல்லது இரவின் வேறு வேறு வேஷங்களா பொழுதுகள் அல்லாது இரவின் கனவுகளா பொழுதுகள் கனவு கலைந்து விழிப்பது இரவாய் அல்லாது பகலாகவே அமைவது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை 3…

மேலும் வாசிக்க

குமரேசன் கிருஷ்ணன் கவிதைகள்

1. கண்டடைய ஏதுமில்லை தினம் ஒரு ராகத்தை எங்கிருந்து எடுக்கின்றன பறவைகள் பாடல் மெருகேற மெருகேற கீழ்வானம் சிவக்கிறது வெட்கச் சிவப்பினை தின்கின்றன பறவைகள். 2. இரவிடம் தான் ஒப்படைத்துவிட்டு பிரிந்தேன் சுமையை இந்தப் புலர் பொழுதோ சுமையோடே விடிகிறது செல்லும் இடமெங்கும் சுமை தாளவில்லை சற்று இளைப்பாறலாம் எனில் ஏந்திக்கொள்ள யாருமில்லை தனிமையின் பாடலை யார் கேட்பர். …

மேலும் வாசிக்க

திருச்செந்தாழை கவிதைகள்

”இது காட்டுப்பூனை… காட்டுப்பூனை” சுற்றுலாவாக வந்திருக்கும் சீனன் கத்துகிறான் புனுகுப்பூனைகளின் கூட்டத்தினூடே தனது உடலைப் பயந்து பதுக்குகிறது காட்டுப்பூனை சந்தனக்கடை முதலாளியின் காலுக்குக்கீழே கம்பிகளால் வரிசையிட்ட சிறியதோர் சதுரத்திற்குள் புனுகுப்பூனைகள் வசிக்கின்றன ‘நுகர்ந்து பார்’ எனும் சலுகையோடு முதலாளி அல்லாப்பிச்சை நீட்டுகிற அத்தர் மணக்கும் விரலின் வாஞ்சையைப் புறக்கணித்து சீனன் இன்னமும் கத்துகிறான் அல்லாப்பிச்சை மந்திரிப்பார் நாள்பட்ட வலியோடு வருபவர்களின் நெற்றியில் அத்தர் கலந்த கருங்களிம்பை மனதின் மெக்காவிலிருந்து அவர் அள்ளிப் பூசும்பொழுது…

மேலும் வாசிக்க

பாத்தேறலுக்குப் புகழஞ்சலி

சிங்கப்பூரின் மூத்த மரபுக் கவிஞர்களில் ஒருவர், தீவிர தூயதமிழ்ப் பற்றாளர், 11 நூல்களின் ஆசிரியர், IceCream என்பதற்குப் பனிக்கூழ் என்ற சொல்லை வழங்கியவருமான பாவலர் பாத்தேறல் இளமாறன் அவர்கள் நீண்ட மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு தனது 80-ஆவது வயதில் சென்ற வியாழன் இரவு 27-மார்ச்-2025 அன்று இயற்கை எய்தினார்கள். அன்னாரது இறுதிச் சடங்கு  மண்டாய் எரியூட்டு வளாகத்தில் நடைபெற்றது. மலேசியாவின் முன்னாள் அமைச்சரும், மலேசிய இந்திய காங்கிரஸ் (ம.இ.க / MIC) கட்சியின் தேசியத் துணைத்தலைவரும்,…

மேலும் வாசிக்க

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]