கடல் நாகங்கள் பொன்னி நூலுக்கு கவிஞர் கலாப்ரியா வழங்கிய அணிந்துரை. ``சிங்களத்தீவின் கடற்கரையை எங்கள் செந்தமிழ்த் தோழர் அழகு செய்தார் எகிப்திய நாட்டின் நதிக்கரையில் எங்கள் இளந்தமிழ் வீரர் பவனி வந்தார்..” இந்த வரிகளை உள்ளடக்கிய கண்ணதாசனின் பிரபலமான திரைப்படப் பாடலை ஒலிக்காமல் 1950 களின் திராவிட இயக்க மேடைகளின் பொதுக் கூட்டங்கள் துவங்கியிருக்காது. அப்படிச் செந்தமிழ்த் தோழர்கள் அழகு செய்த கடற்கரைகள் ஒன்றா இரண்டா? கங்கை கொண்ட புகழும் கடாரம் கொண்ட புகழும் ஒன்றா…
கவிஞர் கலாப்ரியாவின் கவிதை ஆளுமையும் அவரது கவிதை உலகமும் படைப்புலகம் அறிந்ததாக இருந்தாலும், சக கவிஞர்களின் கவிதைகளின் மீதான பார்வையையும், அவரது ரசனையையும் அறிந்துகொள்வதற்கு அவர் தேர்ந்தெடுத்திருக்கும் கவிதைகள் உதவுகின்றன. கலாப்ரியா ரசித்த கவிதைகளை திணைகளில் பகிர்ந்துகொள்கிறார். உள்ளடக்கம், வெளியீடு, கருத்தியல் என எந்தச் சார்புமில்லாமல் தான் ரசித்த கவிதைகளைத் தேர்வு செய்து கொடுத்துள்ளார். இக்கவிதைகள் கலாப்ரியாவின் சிந்தனைப் பிரதியாக வந்துள்ளது. அவரது தேர்வு பொதுவானதாகவே இருக்கிறது, தனது கண்ணோட்டத்தில் ரசித்தவற்றில் சிறந்தவையாகக் கருதுபவையாக ஒரு சிலவற்றை…